தோடர் இன மாணவியை காரில் ஏற்றிச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து கொலை!

0
166
#image_title

தோடர் இன மாணவியை காரில் ஏற்றிச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து கொலை!

உதகை அருகே தோடர் இன மாணவியை காரில் அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்த ரஜ்னேஷ் குட்டன்( 25) கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்ல தோடர் பழங்குடியின மாணவி HPF பகுதியில் பேருந்துக்காக காத்திருந்தார்.

அப்போது காரில் வந்த அவரது உறவினர் ரஜ்னேஷ் குட்டன் என்பவர் வீட்டில் விடுவதாக கூறி அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் பைக்காரா சாலையில் உள்ள அங்கர் போர்ட் வன பகுதியில் வைத்து பாலியல் துன்புறுத்தல் செய்து தலையில் இரும்பால் தாக்கி கொன்று புதரில் விசி விட்டு தலைமறைவானார்.

இந்நிலையில் பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்த அவரை 3 தனிபடை போலிசார் தொடர்ந்து தேடி வந்த நிலையில் இன்று காலை நஞ்சநாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் பைக்காரா காவல் நிலையத்தில் சரணடைந்தார்.இதனைத்தொடர்ந்து அவரிடம் போலிசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

author avatar
Savitha