உச்சத்தைத் தொடும் தங்கத்தின் விலை.!! பொதுமக்கள் அதிர்ச்சி.!!

0
61

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.36,064-க்கு விற்பனையாகிறது.

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர்.

அதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் நிலவி வந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.‌

இந்த நிலையில் இன்று, சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,508-க்கு விற்பனை செய்யப்பட்டு, அதேபோல், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.36,064-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளியின் விலையும் கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.68.90-க்கு விற்பனையாகிறது.