Sports

டோக்கியோ ஒலிம்பிக் ரஷ்யாவுக்கு தடை!


ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய ரஷ்யாவுக்கு டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க உலக ஊக்கமருந்து தடுப்பு மையம் தடை விதித்துள்ளது.


கடந்த 2014ல் ரஷ்யாவின் சோச்சி நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடந்தது இதில் ரஷ்ய நட்சத்திர வீரர்கள் ஊக்க மருந்து உட்கொண்டது தெரியவந்தது. ரஷ்ய விளையாட்டு நட்சத்திரங்கள் ஊக்க மருந்து பயன்படுத்த அந்நாட்டு அரசு ஆதரவாக இருந்தது அம்பலமானது.

இதனையடுத்து ரஷ்யாவுக்கு போட்டிகளில் பங்கேற்க கடந்த 2015ம் ஆண்டு நவம்பரில் 15 மாதம் தடை விதிக்கப்பட்டது இதனால் 2016 இல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ரஷியா தடகள நட்சத்திரங்கள் பங்கேற்க முடியவில்லை இது குறித்த உலக ஊக்க மருந்து தடுப்பு மையம் சார்பில் மூன்று பேர் கொண்ட குழு விசாரணை செய்தது முடிவில் 223 பக்கங்கள் கொண்ட அறிக்கையை வெளியிட்டது இதில் ரஷ்ய ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையில் நம்பகத்தன்மை இல்லை என்றும் இங்கு நடத்தப்பட்ட சோதனைகளின் மாதிரிகளை திட்டமிட்டு அழித்து விட்டார்கள் என தெரிவித்தது.

இந்நிலையில் நேற்று சேலம் சுவிட்சர்லாந்தில் லாசோன் நகரில் உலக ஊக்க மருந்து தடுப்பு மையம் சார்பில் செயற்குழு கூட்டம் நடந்தது கூட்டத்தில் விசாரணையின் குழுவின் பரிந்துரையை ஏற்று ரஷ்யாவுக்கு 4 ஆண்டு தடை விதிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

இதனால் டோக்கியோ ஒலிம்பிக்2020 உலக கோப்பை கால்பந்து கத்தார்2022 பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் 2022 உள்ளிட்ட முக்கிய போட்டிகளில் நட்சத்திர நட்சத்திரங்கள் பங்கேற்க முடியாது. ரஷ்யா சார்பில் 21 நாட்களுக்குள் முறையீடு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment