தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவனுக்கு நேர்ந்த சோகம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

0
63
Plus 1 student who went to school died tragically! The people of the area are deeply saddened!
Plus 1 student who went to school died tragically! The people of the area are deeply saddened!

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவனுக்கு நேர்ந்த சோகம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டினம் அருணாசலப்புரத்தைச் சேர்ந்தவர் ராம்குமார். அவரது மகன் முத்துரோஷன் (11). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவம் நடந்த அன்று முத்து ரோஷன் பள்ளிக்குச் சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.  அப்போது கோமான் மேல் தெரு வழியாக அவரது சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்..

அதே பகுதியில் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. காரானது  நிலை தடுமாறி முத்து ரோஷன் சைக்கிளின் மீது மோதியது. முத்து ரோஷன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு  வந்த பெற்றோர்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் ஆறுமுகநேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த  தகவல் பேரில் கார் ஓட்டி வந்த கையால்பட்டினத்தைச் சேர்ந்த முகமது பாசில் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முத்து ரோஷன் கண்விழித்த பிறகு தான் என்ன நடந்தது என்பதை தெளிவாக தெரியும் என்றும் போலீசார் கூறி வருகின்றனர். பள்ளிக்கு சென்ற மாணவனுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Parthipan K