குடும்ப தகராறில் ஏற்பட்ட விபரீதம்! மனைவியின் கழுத்தை அறுத்த கணவர் அடுத்த செய்த அதிர்ச்சி செயல்! 

0
137
#image_title

குடும்ப தகராறில் ஏற்பட்ட விபரீதம்! மனைவியின் கழுத்தை அறுத்த கணவர் அடுத்த செய்த அதிர்ச்சி செயல்! 

குடும்பத் தகராறில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவர் அடுத்து செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடியை அடுத்துள்ள பட்டாபிராம் மசூதி தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் வயது 46. இவர், அந்த மசூதி தெருவில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி கவுதமி வயது 36. இவர்களுக்கு சீனிவாசன் வயது 16,  ஆகாஷ் வயது 14 என 2 மகன்களும், பவித்ரா (12) என்ற மகளும் உள்ளனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் பிள்ளைகள் 3 பேரும் தூங்கிய பிறகு கணவன்-மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கடும் ஆத்திரமடைந்த மணிகண்டன், சமையல் அறையில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து வந்து தனது மனைவி கவுதமியின் கழுத்தை அறுத்துள்ளார்.  இதில் அதிக ரத்தம் கொட்டியதில் கவுதமி அலறி துடித்து கூச்சிலிட்டார்.

தாயின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் உறங்கி கொண்டிருந்த அவருடைய மூத்த மகன் சீனிவாசன் எழுந்து வந்து பார்த்து தாயின் கழுத்தில் ரத்தம் வெளியேறுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உடனடியாக தனது தாயார் கவுதமியை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்துள்ளார்.  அங்கே கௌதமிக்கு கழுத்தில் 15 தையல்கள் போடப்பட்டது.

இதற்கிடையில் மனைவியின் கழுத்தை அறுத்து விட்டதால் ஒருவேளை அவள் இறந்து விடுவாளோ? என்ற பயத்தில் வீட்டின் படுக்கை அறையில் உள்ள மின் விசிறியில் உள்ள கொக்கியில் மணிகண்டன் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனிடையே சிகிச்சை பெற்று வீட்டிற்கு வந்த கௌதமி தனது கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு பலத்த அதிர்ச்சி அடைந்தார்.

இந்த சம்பவம் குறித்து பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.