இன்று முதல் இந்த இடங்களுக்கு செல்ல ரயில் முன்பதிவு தொடக்கம்! உடனே முந்துங்கள்! 

Photo of author

By Parthipan K

இன்று முதல் இந்த இடங்களுக்கு செல்ல ரயில் முன்பதிவு தொடக்கம்! உடனே முந்துங்கள்! 

Parthipan K

Train bookings to these places start from today! Go ahead now!

இன்று முதல் இந்த இடங்களுக்கு செல்ல ரயில் முன்பதிவு தொடக்கம்! உடனே முந்துங்கள்!

விழா நாட்கள் வந்தாலே பொதுமக்களின் வசதியை கருத்தில் கொண்டு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்து வருவது வழக்கம்.அந்த வகையில் சென்னையில் இருந்து மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவோர் பேருந்து மற்றும் ரயில்களை முன்பதிவு செய்கின்றனர். அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக இருக்கும் வகையில் கூடுதலாக பேருந்து மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டது.

நடப்பாண்டில் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் மகரசங்கராந்தி பண்டிகையையொட்டி நாடு முழுவதும் சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு மகரசங்கராந்தி பண்டிகைக்கு செல்லும் வட மாநில மக்களுக்கு வசதியாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகின்றது.

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து அசாம் மாநிலம் புது தின்சுகியா ரயில் நிலையம் வரை ஜனவரி 8 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர். ஜனவரி எட்டாம் தேதி காலை 10.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில் தின்சுகியாவுக்கு ஜனவரி பத்தாம் தேதி இரவு 7.35 மணிக்கு சென்றடையும். தின்சுகியாவில் இருந்து ஜனவரி 11 ஆம் தேதி இரவு 8.20 மணிக்கு கிளம்பும் ரயில் ஜனவரி 14 ஆம் தேதி காலை 5,45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று அதிகாலை முதல் தொடங்கி உள்ளது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.