கணவனுக்கு தெரியாமல் நண்பனை வளைத்துபோட்ட மனைவி! ஆதாரத்தை வெளியிட்டு வேதனையில் தற்கொலை!

Photo of author

By Jayachandiran

கணவனுக்கு தெரியாமல் நண்பனை வளைத்துபோட்ட மனைவி! ஆதாரத்தை வெளியிட்டு வேதனையில் தற்கொலை!

Jayachandiran

Updated on:

கணவனுக்கு தெரியாமல் நண்பனை வளைத்துபோட்ட மனைவி! ஆதாரத்தை வெளியிட்டு வேதனையில் தற்கொலை!

தாலிகட்டிய புருஷனுக்கு தெரியாமல் அவரது நண்பருடன் தவறான உறவு வைத்திருந்த காரணத்தால் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆறுமுகநேரியைச் சேர்ந்த மகேஷ் என்பவர் தனியார் பேருந்து நிறுவனத்தில் ஓட்டுனநராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்துள்ளார்.

இந்நிலையில், தனது எதிர்கால நலன் கருதி புதிய குடும்பத்தை ஆரம்பிக்க இரண்டாவதாக பெண் பார்த்து அருணா என்பவரை மகேஷ் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவர்களின் குடும்பத்தில் நண்பனின் மூலம் புதிய சிக்கல் உருவாகியுள்ளது. இந்த பிரச்சினை காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி மகேஷ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன்பு தன்னுடைய இறப்பிற்கான காரணத்தை ஆடியோ மூலம் வெளியிட்டுள்ளார்.

அந்த ஆடியோவில், எனது மனைவி அருணா என்னுடைய நண்பனாக இருந்த மதன் என்பவனுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார். இதை அறிந்து அவர்களிடம் கண்டித்த போது என்னை கொன்று விடுவதாக மிரட்டல் விடுக்கின்றனர். இப்பிரச்சினை சம்பந்தமாக ஆறுமுகநேரி காவல்லையத்தில் புகார் கொடுத்தேன். என்னுடைய புகாரை ஏற்காமல் காவல்துறையினர் என்னை திருப்பி அனுப்பினர். எனது மனைவியும், நண்பனும் சேர்ந்து எனக்கு துரோகம் செய்துவிட்டனர். இதனால் என் வாழ்க்கையும், குடும்பமும் சிதைந்துவிட்டது.

அருணா மற்றும் ரதன் மீது நடவடிக்கை எடுங்கள், எனது குழந்தைகளை என் அம்மா வீட்டில் ஒப்படைத்து விடுங்கள் என்று அந்த ஆடியோவில் உருக்கமாக கூறியுள்ளார். இந்த ஆடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நவீன காலத்தில் குடும்பத்தை சிதைக்கும் இதுபோன்ற சம்பவங்கள் பெருகி வருவது குறிப்பிடத்தக்கது.