மது அருந்திக்கொண்டு வாகனம் ஓட்டியவரை தட்டி கேட்ட நபர் மீது காரால் மோதி கொலை முயற்சி!

0
126
#image_title

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே மது அருந்திக்கொண்டு வாகனம் ஓட்டியவரை தட்டி கேட்ட இளைஞரை காரால் மோதி கொலை முயற்சி சிசிடிவி காட்சி வைரல் இருவர் கைது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே நெடுமங்காடு வெமபாயம் சாலையில் அஜாக்கிரதையாகவும் அதிவேகமாகவும் சென்ற காரை தடுத்து நிறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த அகில் கிருஷ்ணன் என்ற இளைஞர் உட்பட அப்பகுதி மக்கள் எச்சரித்து அனுப்பினர்.

இதனால் ஆத்திரமடைந்த காரில் இருந்த கும்பல் அகில் கிருஷ்ணன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பின்னால் சென்று அந்த வாகனத்தில் காரால் மோதி கொலை செய்ய முயற்சித்துள்ளனர்.

பின்னர் அங்கிருந்து கார் தப்பிச் சென்றது. இது தொடர்பாக நெடுமங்காடு போலீசாருக்கு பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்து காரில் இருந்த நபர்களை கண்டறிந்தனர்.

பின்னர் தலைமறைவாக இருந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இருவரையும் கைது செய்ததோடு சம்பந்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். கைதான இருவர் மீதும் கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட பிரிவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இளைஞரை கார் ஏற்றி கொல்ல முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

author avatar
Savitha