தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு பெண்ணிற்காக இரண்டு வாலிபர்கள் தகராறு! அரிவாள் வெட்டால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

0
58
The incident in Thanjavur district where two people attacked for 500 rupees! A lot of excitement in the area!
The incident in Thanjavur district where two people attacked for 500 rupees! A lot of excitement in the area!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு பெண்ணிற்காக இரண்டு வாலிபர்கள் தகராறு! அரிவாள் வெட்டால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பால்பண்ணை பகுதியை சேர்ந்தவர்  அய்யாசாமி. இவரது மகன் ஆறுமுக நாயனார் (31). இவருக்கு ஒரு தங்கை உள்ளார். மேலும் வழக்கமாக அந்த பகுதியில் உள்ள பைப்பிற்கு குடிநீர் எடுத்து வருவதற்காக அவரது தங்கை  செல்வார்.

மேலும் இந்நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் தேவ சகாயம் என்பவரின்  மகன் அந்தோணி செல்வராஜ் (62). என்பவர் அவதூறாக பேசினார் என்றும் கூறப்படுகிறது. அதனை ஆறுமுக நாயனார் தட்டி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது இந்த வாக்குவாதம் சிறிது நேரத்தில் கைகளப்பாக மாறியது .

மேலும் அந்தோணி செல்வராஜ் ஆத்திரமடைந்து ஆறுமுக நாயனாரை அறிவாளால் வெட்டினார் என  கூறப்படுகிறது. மேலும் இதில் காயமடைந்த ஆறுமுக நாயனார் தூத்துக்குடி அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் மேலும் இது குறித்து ஆறுமுக நாயனார் முத்தையாபுரம் போலீசாரிடம் தகவல் தெரிவித்தார் இந்த தகவலின் பெயரில் முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
Parthipan K