பொத்தி பொத்தி வச்ச உண்மையை உளரிய உதயநிதி!!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள் அதிர்ச்சியில் படக்குழு!!!

0
63
#image_title

பொத்தி பொத்தி வச்ச உண்மையை உளரிய உதயநிதி!!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள் அதிர்ச்சியில் படக்குழு!!!

கடந்த 6 மாதங்களாக லியோ படக்குழு பொத்தி பொத்தி வைத்திருந்த உண்மையை உதயநிதி ஸ்டாலின அவர்கள் தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சனம் என்ற பெயரில் பதிவிட்டு உளரியுள்ளார். இதனால் அதிர்ச்சியில் படக்குழுவும், எதிர்பார்ப்பில் ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் நாளை அதாவது அகோடபர் 19ம் தேதி உலகளவில் வெளியாகவுள்ளது. நடிகர் விஜய் திரைப்படம் வெளியாகவுள்ள நாளை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர்.

லியோ திரைப்படத்திற்கு நாளுக்கு நாள் பல தடைகள் வந்தாலும் நிமிடத்திற்கு நிமிடம் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகின்றது. இதற்கு நடிகர் விஜய் அவர்களின் நடிப்பு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கம் ஆகியவை ஒரு புறம் இருக்க எல்சியு என்ற கான்செப்ட் முக்கியமான காரணமாக இருக்கின்றது.

அதாவது எல்.சி.யூ என்றால் லேகேஷ் சினிமேட்டிக் யூனிவர்ஸ் ஆகும். அதாவது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி திரைப்படத்தை அடுத்து இயக்கிய விக்ரம் திரைப்படத்துடன் இணைத்து எடுத்தார். அதற்கு ரசிகர்கள் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்று பெயரிட்டு எல்சியு என்று அழைத்து வந்தனர்.

இதையடுத்து எல்.சி.யூ உலகில் வேறு எந்தெந்த நடிகர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்த ரசிகர்களுக்கு தளபதி67 அதாவது நடிகர் விஜய் அவர்கள் நடிக்கும் 67வது படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று அறிவிப்பு வெளியானது. அன்றை தினத்தில் இருந்து இந்த திரைப்படம் எல்சியு கான்செப்டில் வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்கள் அனைவரும் படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் பொழுது எல்சியு இருக்கின்றது என்று கூறி வந்தனர்.

இந்நிலையில் லியோ படக்குழு அதை மறுக்காமல் சமாளித்து இத்தனை நாட்களாக அந்த ரகசியத்தை பாதுகாத்து வந்தது. இந்நிலையில் படத்தை பார்த்த நடிகர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் லியோ படக்குழு பாதுகாத்து வந்த ரகசியத்தை பானையை போட்டு உடைப்பது போல ஒரே ஒரு டுவீட்டால் வெளிப்படுத்தி விட்டார்.

லியோ படத்தை பார்த்த நடிகர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் எக்ஸ் பக்கத்தில் தளபதி விஜய் அண்ணாவுடயை லியோ என்று பதிவிட்டு மூன்று தம்ப்ஸ்அப் ஸ்மைலியை பதிவிட்டுள்ளார். மேலும் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கம் அனிருத் அவர்களின் இசையமைப்பு, அன்பறிவு மாஸ்டர்ஸ் சண்டைக் காட்சி அமைப்பு ஆகியவற்றையும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அவர் பாராட்டி பதிவிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் இறுதியில் எல்.சி.யூ என்று பாடிவிட்டு கண் அடிக்கும் ஸ்மைலி பொம்மையை போட்டு படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

இதனால் லியோ திரைப்படம் எல்.சி.யூவில் வரவுள்ளது என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் திரைப்படம் உண்மையில் எல்சியூவில் வருகிறதா அல்லது ஏற்கனவே இருக்கும் எதிர்பார்ப்பை அதிகரிக்க உதயநிதி அவர்கள் இவ்வாறு பதிவிட்டாரா என்பது எல்லாம் நமக்கு நாளை(அக்டோபர்19) தெரியவரும்.