மூல நோய் அடியோடு குணமாக “வெந்தயம் + வெங்காயம்” இப்படி பயன்படுத்துங்கள்!!

0
198
#image_title

மூல நோய் அடியோடு குணமாக “வெந்தயம் + வெங்காயம்” இப்படி பயன்படுத்துங்கள்!!

இன்றைய காலகட்டத்தில் மூல நோய் பாதிப்பு ஏற்படுவது என்பது சாதாரண ஒன்றாக மாறிவிட்டது.இறுகி கடினமான மலம் வெளியேறுதல்,முக்கி முக்கி மலம் கழித்தல்,மலம் கழித்தலின் போது இரத்தம் ஆசனவாயில் இரத்தம் கசிதல் ஆகியவை மூல நோய்க்கான அறிகுறிகள் ஆகும்.

இதை வீட்டில் உள்ள வெந்தயம் மற்றும் சின்ன வெங்காயத்தை கொண்டு எளிதில் குணமாக்கி கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:-

1)வெந்தயம்
2)சின்ன வெங்காயம்
3)தண்ணீர்
4)தேன்

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 1/2 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து தண்ணீர் ஊற்றி ஒரு இரவு ஊற வைக்கவும்.

மறுநாள் நான்கு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு ஊறவைத்த வெந்தயத்தை மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

இந்த பேஸ்டை கொதிக்கும் நீரில் போடவும்.பிறகு நறுக்கிய சின்ன வெங்காயத்தை போட்டு மிதமான தீயில் 2 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது தேன் கலந்து காலை மலை இருவேளையும் குடித்து வந்தால் மூல நோய் சில தினங்களில் குணமாகும்.