ஈரோடு மாவட்டத்தில் வேன் கவர்ந்த கோர விபத்து! பதினொரு க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்!

0
106
Van involved in a tragic accident in Erode district! More than eleven people were seriously injured!
Van involved in a tragic accident in Erode district! More than eleven people were seriously injured!

ஈரோடு மாவட்டத்தில் வேன் கவர்ந்த கோர விபத்து! பதினொரு க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த வடமல்லி பகுதியில் உள்ள வடக்குப்பேட்டையில் தென்னந்தோப்புக்கு விவசாயிகள் பணிக்காக சென்றனர். வேனில்  விவசாயிகள் ஆண்களும், பெண்களும் என 15 பேர்கள் சென்று கொண்டிருந்தனர். மேலும்  திருப்பூர் பெரிச்சிபாளையத்தை சேர்ந்த மகேந்திரன் (50) என்பவர்  அந்த வேனை இயக்கினார்.

மேலும் அந்த சரக்கு வேனானது சத்தியமங்கலத்தையடுத்த முருகன் கோவில்மேடு என்ற பகுதியில்  சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வேன் நிலை தடுமாறி ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வடவள்ளியைச் சேர்ந்த அம்மாசை(46),சுரேஷ்(39), சக்திவேல்(37), திலகா(36), சித்ரா(31), நடராஜ்(40),ரங்கசாமி(33), துரை(38), தங்கவேல்(36), கதிர்வேல்(38),சுரேஷ்(38) என 11 பேர்கள் படுகாயம் அடைந்தனர்.

மேலும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்  நான்கு பேர்களும் மேல் சிகிச்சைக்காக சத்தியமங்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் அந்த வேனை  இயக்கியவர் மகேந்திரன் என்பவர் காயமின்றி  உயிர் தப்பினார். மேலும்  இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில்  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

author avatar
Parthipan K