உங்கள் ஊருக்கும் வருகிறது “வந்தே பாரத்”!! இனி பயண நேரம் குறைவு!!

Photo of author

By CineDesk

உங்கள் ஊருக்கும் வருகிறது “வந்தே பாரத்”!! இனி பயண நேரம் குறைவு!!

CineDesk

Vande Bharat train service to start on August 6!! Super news released!!

உங்கள் ஊருக்கும் வருகிறது “வந்தே பாரத்”!! இனி பயண நேரம் குறைவு!!

இந்தியாவில் கடந்த 2019  ஆம் ஆண்டு முதன் முறையாக வந்தே பாரத் ரயில் தொடங்கப்பட்டு, இன்று மொத்தம் 24  வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த வந்தே பார்த் ரயிலானது தமிழகத்தில் முதன் முறையாக சென்னை- மைசூர் இயக்கப்பட்டது. மற்ற ரயில்களை விட வந்தே பாரத் ரயில்களில் கட்டணம் மிகுதி என்றாலும் பயண நேரம் குறைவு என்பதனால் மக்கள் இதில் பயணம் செய்கின்றனர்.

இதனைத்தொடர்ந்து வந்தே பாரத் சேவை தமிழகத்தில் ஏப்ரல் மாதம் சென்னையில் இருந்து கோவைக்கு இயக்க கொண்டு வரப்பட்டது. இந்த வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து துவங்கி வைத்தார்.

இந்த ரயிலானது சேலம், திருப்பூர் மற்றும் ஈரோடு போன்ற ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதற்கு அடுத்த படியாக தற்போது இந்த வந்தே பார்த் ரயிலானது சென்னையில் இருந்து நெல்லைக்கு இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ரயில் சேவை அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் இந்த வந்தே பாரத் ரயிலில் எட்டு பெட்டிகள் இருக்கும் என்றும், பிறகு மக்களின் பயன்பாட்டை பொறுத்து மேலும் பெட்டிகள் சேர்க்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த எட்டு பெட்டிகளும் இருக்கை வசதிகள் மட்டுமே கொண்டுள்ளது. மேலும், மற்ற ரயில்களில் சென்னை-நெல்லை பத்து மணிநேரம் என்கிற பட்சத்தில், இந்த வந்தே பாரத் ரயிலில் எட்டு மணி நேரம் மட்டுமே ஆகும்.

இந்த ரயில் இடையில் சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய நான்கு ரயில் நிலையங்களில் நின்று வரும்.இந்த செய்தியால் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.