“No bag day” திட்டம் அமலுக்கு வருமா?? தமிழக அரசில் பதில் என்ன??
அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் செயல் பட்டுத்தப்பட்டு வருகின்றனர்.அதில் இலவச கல்வி,மத்திய உணவு திட்டம் போன்றவை வழக்கப்படுகின்றது.தற்பொழுது காலை உண்ணவும் பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறு மாணவர்களின் நலன் கருதி செயல்படும் திட்டங்களில் இந்த இலவச பேருந்து திட்டமும் ஒன்றாகும். இந்த வசதி தொலைதூர கல்வி பயிலும் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன் பெரும் வகையில் அமைகின்றது. இதன் மூலம் மட்டும் மொத்தம் தமிழகத்தில் 30 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறுகிறார்கள்.
இந்த நிலையில் பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையிலும் அவர்களது ஆர்வத்தை தூண்டும் வகையிலும் புதிய திட்டத்தை பள்ளிகல்வித்துறை ஏற்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் இனி மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் மாணவர்களாக இல்லமால் கற்றல் திறன் அதிகமுள்ள மாணவர்களாக இருப்பார்கள் என்று கருதப்படுகின்றது.
ஒவ்வொரு மாணவர்களும் கிலோ கணக்கில் நோட்டு பாட புத்தகத்தையும் ,நோட்டு புத்தகத்தையும் சுமந்து செல்கின்றனர். இப்படி இருக்கும் மாணவர்கள் ஒரு நாளாவது புத்தக பை இல்லாமல் பள்ளிக்கு சென்று கற்றால் எப்படி இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் உத்திரபிரதேசம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் மாணவர்கள் புத்தக பை இன்றி பள்ளிக்கு சென்று உடல் ஆரோக்கியம் ,போதைபொருள் ஒழிப்பு ,போக்குவரத்து விதிகள் போன்ற பாடங்களை கற்று வருகின்றனர்.
தற்பொழுது புதுச்சேரி மாநிலத்திலும் மாணவர்கள் ஒவ்வொரு மாத கடைசியிலும் புத்தக பை இன்றி பள்ளிக்கு வரலாம் என்றும் அந்த நாள் புத்தக நாளாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுற்தப்பட்டுள்ளது. அப்படி அந்த மாதத்தின் கடைசி நாள் விடுமுறை நாளாக அமையம் பட்சத்தில் அதற்க்கு முன் தினம் no bag day என்று கடைபிடிக்க படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த no bag day தேசிய கொள்கையின் ஒரு முக்கிய அங்கமாக இருப்பதால் இதனை தமிழகத்தில் நடைமுறை படுத்த தமிழக அரசு பரிசீலனை செய்து வருகின்றது.