State

வேலம்மாள் கல்லூரியில் கணக்கில் வராத 400 கோடி சொத்துகள்! பிரித்து மேய்ந்த புலனாய்வு துறையினர்!!

வேலம்மாள் கல்லூரியில் கணக்கில் வராத 400 கோடி சொத்துகள்! பிரித்து மேய்ந்த புலனாய்வு துறையினர்!!

தமிழகத்தில் பிரபலமான கல்விக் குழுமங்களில் வேலம்மாள் கல்லூரியும் ஒன்று. இக்கல்வி குழுமத்தில் நன்கொடை பெறுவதாக வந்த தகவலின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டது. இந்த கல்விக் குழுமத்தின் பெயரில் பள்ளிகள், கல்லூரிகள், ஆசிரமம் உட்பட அறுபது இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் முதல்கட்ட சோதனை நடத்தினர்.

வேலம்மாள் கல்வி நிறுவனத்தில் திடீரென வருமானவரி புலனாய்வு துறை அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட சோதனையில், சட்டப்படி கணக்கில் வராத 2 கோடி ரூபாய் பணமும், 400 கோடி ரூபாய் மதிப்பில் சொத்துகளும் உடனடியாக கண்டெடுக்கப்பட்டது. இந்த சோதனை நான்கு நாட்களாக நடத்தப்பட்டதாகும்.

சட்டத்திற்கு புறம்பான சொத்துக்கள் மீதான விசாரணை நடந்து வருகிறது. கல்வி நிறுவனங்கள் அதிகமான நன்கொடை வாங்கி வரும் சம்பவங்கள் நாளுக்குநாள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. பணத்தை கொள்ளை அடிக்கும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாமல், இது போன்ற சம்பவங்களை அரசு உடனடியாக தடுத்து அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்கப்பட வேண்டும் என்பது பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave a Comment