சிவகங்கை மாவட்டம் திருபுவனம் கோவிலில் காவலராக பணிபுரிந்த அஜித்குமார் என்பவரை 10 பவுன் நகை காணாமல் போன வழக்கில் காவலர்கள் கைது செய்து FIR பதிவு செய்யாமலேயே காவல் நிலையத்திற்கு விசாரணை என்கிற பெயரில் அழைத்து சென்று அவரை அடித்து துன்புறுத்தி கொலை செய்துள்ளனர். அஜித்குமாரின் உடலில் 18 இடங்களில் காயம் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக கட்சியின் தலைவர் விஜய் போன்ற தலைவர்கள் இந்த லாக்கப் டெத் குறித்து தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்நிலையில் தவெக கட்சியின் தலைவர் விஜய் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திமுக கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து 2021 முதல் இன்று வரை 24 லாக் அப் டெத் நடந்துள்ளது. உள்துறை அமைச்சர் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது தான் இந்த காவல்துறை இந்த நிகழ்வில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை மற்றும் தமிழக முதல்வர் மீது மக்கள் முழு நம்பிக்கையை இழந்து விட்டனர். எனவே இந்த வழக்கை தமிழக காவல்துறை விசாரித்தால் அது சரியாக இருக்காது.
அண்ணா பல்கலைக்கழக வழக்கில் நீதிமன்றம் தலையிட்டு சிறப்பு புலனாய்வு துறைக்கு வழக்கை மாற்றியதை போல இந்த வழக்கையும் சிறப்பு புலனாய்வு துறைக்கு மாற்ற வேண்டும். அண்ணா பல்கலைக்கழக வழக்கை போல இந்த வழக்கிலும் துரிதமாக செயல்பட்டு பாதிக்கப்பட்ட அஜித்குமாருக்கு நீதி கிடைக்க வேண்டும். இது போன்ற கொடூர சம்பவம் இனி ஒருபோதும் நடக்காது என்று முதல்வர் மு க ஸ்டாலின் மக்களுக்கு உடனடியாக உறுதியும், உத்தரவாதமும் அளிக்க வேண்டும்.
மனிதாபிமானம் அறவே அற்று சாமானியருக்கு அநீதி இழைக்கும் துறையாக காவல்துறை நடக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் நலன்களின் மீது எந்த அக்கறையும் இல்லாமல் திமுக அரசு இதேபோல தொடர்ந்து செயல்பட்டால் 2026 நடக்கப்போகும் சட்டமன்றத் தேர்தலில் வரலாற்றில் எதிர்பார்க்காத அளவுக்கு ஒரு மிகப்பெரிய தோல்வியை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன் என விஜய் அறிக்கை விடுத்துள்ளார். முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் கொடுத்த எச்சரிக்கை தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.