அரசு பேருந்து ஓட்டுநரின் அத்துமீறல் செயல்! பள்ளிக்குச் செல்ல மறுத்த மாணவிகள்!
சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம் பெரிய சோரகை பகுதியில் உள்ள பகுதியில் வசிக்கும் மாணவ மாணவிகள் தாரமங்கலம் அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர்.அந்த பகுதியில் அரசு பேருந்து இயக்குபவர் முருகேசன். இவர் மாணவிகளை கடுமையான சொற்களால் இழிவாக பேசியதாக மாணவிகள் கூறியுள்ளனர்.
மேலும் இது குறித்து தாரமங்கலம் போலீசார்ரிடம் புகார் அளித்தனர்.ஆனால் போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திய ஓட்டுநர் தொடர்ந்து மாணவிகளிடம் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார்.இதனால் மாணவிகள் பள்ளிக்கு செல்ல மறுத்துள்ளனர்.அதனையடுத்து மாணவிகளின் பெற்றோர் மேட்டூரில்லிருந்து நங்கவள்ளி வழியாக தாரமங்கலம் வந்த அரசு பேருந்தை மக்கள் சிறை பிடித்தனர்.
இதனையடுத்து தகவல் அறிந்த தாரமங்கலம் காவல் ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.மேலும் அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தொலைபேசி வாயிலாக உறுதி அளித்தார்அதனைத்தொடர்ந்து பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.மாணவிகளையும் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.இந்த போராட்டத்தில் தாரமங்கலம் நங்கவள்ளி சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.