மருதாணியே இல்லாமல் உங்கள் கைகள் சிவக்க வேண்டுமா? அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்கள்!!

0
92
#image_title

மருதாணியே இல்லாமல் உங்கள் கைகள் சிவக்க வேண்டுமா? அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்கள்!!

மருதாணி இல்லாமல் கைகளை அழகாக சிவக்க வைக்கும் ட்ரிக் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

1)குங்குமம்
2)எலுமிச்சை சாறு

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 3 தேக்கரண்டி குங்குமம் கொட்டிக் கொள்ளவும்.பிறகு ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி பாதி எலுமிச்சம் பழ சாற்றை குங்குமத்தில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

பிறகு ஒரு பட்ஸ் எடுத்து குங்குமத்தில் நனைத்து விரல்களில் மருதாணி போல் வைக்கவும்.15 நிமிடங்களுக்கு காய விட்டால் கைகளில் மருதாணி போல் சிவந்து இருக்கும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

1)சீரகம்
2)வெள்ளை சர்க்கரை
3)குங்குமம்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதனுள் ஒரு கிண்ணம் வைத்துக் கொள்ளவும்.அந்த கிண்ணத்தை சுற்றி 2 தேக்கரண்டி சீரகம்,2 தேக்கரண்டி வெள்ளை சர்க்கரை சேர்க்கவும்.பின்னர் பாத்திரத்தின் மேல் ஒரு பாத்திரம் வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்களுக்கு மிதமான தீயில் சூடாக்கவும்.

இவ்வாறு செய்தால் இன்ஸ்டன்ட் மருதாணி கிடைக்கும்.இதை ஆறவிட்டு சிறிது குங்குமம் சேர்த்து கலக்கவும்.பிறகு ஒரு பட்ஸ் எடுத்து இன்ஸ்டன்ட் மருதாணியில் நனைத்து விரல்களில் மருதாணி போல் வைக்கவும்.15 நிமிடங்களுக்கு காய விட்டால் கையில் மருதாணி போல் சிவந்து இருக்கும்.