இந்தியா – இங்கிலாந்து தொடரை நாங்கள் நடத்த தயார்

0
49
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. அந்த வகையில் கிரிக்கெட் போட்டிகளும் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்தியாவில் நடக்க இருந்த ஐபிஎல் தொடர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது தடுப்பூசி கண்டுபிடிக்கவில்லை  எனில் இந்தியா இயல்பு நிலைக்கு திரும்ப பல மாதங்கள் ஆகலாம். இங்கிலாந்து அணி இந்தியாவில் 5  டெஸ்ட் போட்டிகள் விளையாட உள்ளது ஆனால் தற்போது உள்ள நிலைமை நீடித்தால் அந்த தொடரை நடத்த  இலங்கை கிரிக்கெட் போர்டு தயாராக உள்ளது.
author avatar
Parthipan K