நாங்கள் போரை விரும்பவில்லை: – ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி!

0
50

நாங்கள் போரை விரும்பவில்லை: – ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி!

உக்ரைன் மற்றும் ரஷியாவிற்கு இடையே நடைபெற்று வரும் போர் 15 நாட்களை கடந்தும் நீடித்து வருகிறது. உக்ரைன் மீது ரஷியா மிகத் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியாவின் இந்த தீவிர தாக்குதலுக்கு உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரின் காரணமாக உள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் உக்ரைனில் சிக்கி உள்ளனர்.

இரண்டு வாரங்களை கடந்தும் உக்ரைன் மற்றும் ரஷியாவிற்கு இடையேயான போர் நிறுத்தப்படாமல் நீடித்து வருகிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷிய ராணுவம் தொடுத்துள்ள இந்த போரின் காரணமாக உக்ரைன் நாட்டில் இருந்து தினமும் லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் வெளியேறி வருகின்றனர். இதுவரை இருபது லட்சத்திற்கும் அதிகமானோர் உக்ரைனை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.

உக்ரைன் மீது ரஷிய படைகள் மிகத் தீவிரமாக நடத்தி வரும் போரை கைவிட பல உலக நாடுகள் வலியுறுத்திய போதிலும் போரை நிறுத்தாமல் ரஷியா தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரை நிறுத்த உலக நாடுகளும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன.

அந்த வகையில், போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன், ரஷியா இடையே இதுவரை மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அந்த மூன்று கட்ட பேச்சுவார்த்தையிலும் எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை. இந்த நிலையில் நேற்று துருக்கியில் ரஷியா மற்றும் உக்ரைன் வெளியுறவு மந்திரிகள் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

போர் நிறுத்தம் தொடர்பாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என உக்ரைனின் வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்தார். இந்நிலையில், ரஷியா ஒருபோதும் போரை விரும்பியதில்லை என  ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி கூறியுள்ளார்.  தற்போதைய மோதலையும் முடிவுக்கு கொண்டுவரவே ரஷியா முயற்சிக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
Parthipan K