எப்பேர்ப்பட்ட சிறுநீரக கல்லும்!! ஒரே வாரத்தில் வெளியேறிவிடும்!!

0
35

எப்பேர்ப்பட்ட சிறுநீரக கல்லும்!! ஒரே வாரத்தில் வெளியேறிவிடும்!!

தற்போதைய காலத்தில் சிறுநீரக கற்கள் வருவது சாதாரணமாகிவிட்டது. உலகில் 10 சதவீதத்திற்கும் அதிகமானோர் தங்கள் வாழ்நாளில் குறைந்தது ஒரு முறையாவது சிறுநீரக கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுவார்கள்.

குறிப்பாக ஆண்கள் தான் இப்பிரச்சனையால் பெண்களை விட அதிகமாக கஷ்டப்படுவார்கள். அதிலும் ஒருவருக்கு சிறுநீரக கல் பிரச்சனை தீவிரமாக இருந்தால், அது முதுகின் பின்புறத்தில் கடுமையான மற்றும் கூர்மையான வலியை சந்திக்க வைக்கும்.

உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் உடலில் இருக்கும் கழிவுகள் அவ்வ போது வெளியேறவும் வேண்டும். இந்த கழிவுகளை சுத்தம் செய்து வெளியே அனுப்பும் வேலை யை செய்வதுதான் நம் உடலில் இருக்கும் சிறுநீரகம். சிறுநீரகத்தின் ஆரோக்கி யத்தில் பாதிப்பு உண்டாகும் போது போது உடலின் இயல்பான பணிகள் பாதிப்புக்குள்ளாகிறது.

உடலில் இருக்கும் அதிகப்படியான கால்சியம், யூரிக், ஆக்சிலேட் போன்றவை சிறுநீர் வழியாக வெளியேற வேண்டும். இவை வெளியேறாமல் சிறுநீரகப்பாதையை அடைத்து கொண்டு நிற்கும் போது, தேங்கும் போது அவை படிமங்களாக படிந்து நாளடைவில் கற்கள் போன்று கடினமாக மாறும். இப்படி உருவாகும் கற்களை சுலபமாக வீட்டிலிருந்தே சரி செய்ய முடியும்.

தேவையான பொருட்கள்

மிளகு

சின்ன வெங்காயம்

எலுமிச்சை பழம்

தேன்

செய்முறை

1: முதலில் சின்ன வெங்காயத்தை எடுத்து அதன் தோலை நீக்கி விட வேண்டும் பின்பு அவற்றை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

2: இவற்றுடன் ஒன்பது மிளகை எடுத்துக் கொள்ள வேண்டும்.

3: இந்த சின்ன வெங்காயத்தையும் மிளகையும் சேர்த்து நன்றாக இடித்துக் கொள்ள வேண்டும்.

4: இன்னொரு புறம் ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டு துண்டுகளாக நறுக்கி அதில் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து விட வேண்டும்.

5: இதனோடு இரண்டு ஸ்பூன் சுத்தமான தேனை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

6: பின்னர் ஒரு கிளாஸில் 200 ml தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும்.

7: இவற்றுடன் எலுமிச்சை பழம் மற்றும் தேன் கலந்த கலவையை ஊற்ற வேண்டும்.

8: பின்னர் எடுத்து வைத்திருந்த சின்ன வெங்காயம் மற்றும் மிளகையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

9: இவை அனைத்தையும் நன்கு கலந்து விட வேண்டும்.

10: இவ்வாறு செய்த இந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கூடிய விரைவில் சிறுநீரக கற்கள் உடலில் இருந்து வெளியேறிவிடும்.

இதனை கற்களின் அளவைப் பொருத்து இந்த குடிநீரால் கற்கள் வெளியேறும்.

author avatar
Parthipan K