நிலம் விற்று பணத்தை தராத தந்தைக்காக  மகன் செய்த செயல்!! ஆனால் வேறொருவருக்கு வினையான பரிதாபம்!!

0
60
Son's act of anger against his father who sold the land and did not give him the money!! But the reaction to someone else!!
Son's act of anger against his father who sold the land and did not give him the money!! But the reaction to someone else!!

நிலம் விற்று பணத்தை தராத தந்தைக்காக  மகன் செய்த செயல்!! ஆனால் வேறொருவருக்கு வினையான பரிதாபம்!!  

நிலத்தை விற்று தந்தை பணத்தை தராததால் அவருக்கு மகன் செய்த செயலில் வேறு இருவர் மாட்டிகொண்டு படுகாயமடைந்தனர்.

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவர் சில நாட்களுக்கு முன்னால் தனது நிலம் ஒன்றினை விற்பனை செய்து உள்ளார். அதில் வந்த பணத்தில்   ரூ.3 லட்சத்தை தனக்கு தர வேண்டும் என அவருடைய மகன் அருண் (வயது 30) கேட்டுள்ளார். ஆனால் தனது மகனுக்கு பணத்தை கொடுக்க பன்னீர் செல்வம் மறுத்து விட்டார். இதனால் தந்தை- மகன் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதில்  அருண் வீட்டை விட்டு வெளியே சென்றார்.

பின்னர் அவரது மைத்துனர் பிரவீன் வயது 28, என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வந்த அருண் தனது தந்தையை நோக்கி குறிவைத்து வாசலில் நாட்டு வெடி குண்டுகளை வீசிவிட்டு ஓடியுள்ளார். ஆனால் அது வாசலில் நின்று கொண்டிருந்த அருணின் சித்தப்பா வெற்றி வேந்தன் வயது 55, அருணின் தங்கை ரேகா வயது 25, ஆகிய இருவர் மீதும் பட்டு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் காயமடைந்த இருவரையும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரும்பாக்கம், போலீஸ் இன்ஷ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர்.மேலும் வெடிகுண்டு நிபுணர்களை வர வைத்து சோதனை செய்ததில் வீட்டில் மேலும் 4 நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கபட்டது. பின்னர் அதை மீட்டு செயலிழக்க எடுத்துச் சென்றனர். மேலும் தப்பி ஓடிய அருண்,பிரவீன் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

சொந்த வீட்டின் முன்பு அதுவும் பெற்ற தந்தை மீது வாலிபர் வெடிகுண்டுகளை வீசிய சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.