12 ராசிக்காரர்கள் இந்த நாளில் எதை தொடங்கினாலும் வெற்றி தான்!

0
214
#image_title

12 ராசிக்காரர்கள் இந்த நாளில் எதை தொடங்கினாலும் வெற்றி தான்!

1)மேஷம்

முருகன் வழிபாட்டிற்கு உகந்த செவ்வாய் கிழமையில் மேஷ ராசியில் பிறந்தவர்கள் எந்த காரியத்தை தொடங்கினாலும் அவை வெற்றியை தேடி தரும்.

2)ரிஷபம்

நீங்கள் எந்த ஒரு நல்ல காரியத்தை செய்ய நினைத்தாலும் திங்கள், புதன், வெள்ளி, சனி ஆகிய தினங்களில் தொடங்குவது நல்லது. இதனால் வெற்றியாளர்களாக உருவெடுப்பீர்கள்.

3)மிதுனம்

உங்கள் ராசிப்படி நீங்கள் மங்களகரமான புதன் கிழமையில் நல்ல காரியங்களை தொடங்குவது சிறப்பு.

4)கடகம்

இந்த ராசிக்காரர்களுக்கு வாரத்தில் 7 நாட்களும் நல்ல நாட்களே. எனவே எந்த நாளில் நீங்கள் ஒரு செயலை தொடங்கினாலும் அவை வெற்றியில் தான் முடியும்.

5)சிம்மம்

சூரிய பகவானுக்கு உகந்த ஞாயிற்றுக் கிழமை நாளில் நீங்கள் எந்த காரியத்தை தொடங்கினாலும் வெற்றியே.

6)கன்னி

திங்கள், வள்ளி, புதன் ஆகிய தினங்கள் தங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் நாள் ஆகும்.

7)துலாம்

வெள்ளிக்கிழமையில் துலாம் ராசியினர் ஒரு செயலை மேற்கொண்டால் அவை நல்லபடியாக முடியும்.

8)விருச்சிகம்

ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய 3 தினங்கள் உங்களுக்கு ராசியானவை. தாங்கள் செய்ய நினைக்கும் காரியத்தை இந்த தினங்களில் செய்தால் நிச்சயம் நல்ல பலனை கொடுக்கும்.

9)தனுசு

உங்கள் ராசிக்கு உகந்த நாள் வியாழன். இந்த நாளில் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

10)மகரம்

சனிக்கிழமை தங்களுக்கு அதிர்ஷ்ட நாள். இந்த நாளில் நீங்கள் புத்துணர்ச்சியுடன் ஒரு செயலை செய்யத் தொண்டங்குவீர்கள்.

11)கும்பம்

வியாழன், வெள்ளி தங்களுக்கு உகந்த நாள். அனைத்து செயல்களுக்கும் வெற்றியை கொடுக்கும்.

12)மீனம்

புதிய விஷயங்களை தொடங்க நினைத்தால்.. அதை வியாழன் அன்று தொடங்கலாம். உங்கள் ராசிப்படி இந்த நாள் உங்களுக்கு உகந்த நாள் ஆகும்.