ஒரே இரவில் மூலநோய் குணமாக இந்த ஒரு ரெமெடி போதும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

0
76

ஒரே இரவில் மூலநோய் குணமாக இந்த ஒரு ரெமெடி போதும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

ஒருவரின் ஆசன வாயில் நரம்புகள் வீங்கும் பட்சத்தில் அது மூலமாக வெளிப்படும். இந்த மூலமானது இரண்டு வகையாக காணப்படும். ஒருவருக்கு வெளிப்புற மூலம் இருந்தால் அவரின் ஆசனவாய் சுற்றி எரிச்சல் மற்றும் அரிப்பு காணப்படும். அதேபோல மலம் கழிக்கும் பொழுது ரத்தப்போக்கும் ஏற்படலாம்.

இதுவே உள்புற மூல நோயில் இது எதுவும் காணப்படாது. உள்புற மூல நோய் இருப்பதை உடனடியாக கண்டுபிடிக்கவும் முடியாது. நாளடைவில் அவர்கள் மலம் கழிப்பதை வைத்து தான் இதனை உணர முடியும். இந்த காலகட்டத்தில் இளம் வயது முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். இதனை மருந்து மாத்திரை இன்றி சித்த வைத்திய முறையில் சுலபமாக குணப்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:

நிலாவரை 1/2 கிலோ

ஓமம். 200 கிராம் 100 கிராம்

வாய்விளங்கம். 100 கிராம்

கடுக்காய். 1/4 கிலோ

ரோஜா பூ 1/4 கிலோ

அதிமதுரம். 100 கிராம்

இந்துப்பு 100 கிராம்

தேன். 2 1/2 கிலோ

நெய். 1/4 கிலோ

செய்முறை:

தற்பொழுது தேவையான பொருட்களில் கொடுத்துள்ள அனைத்தையும் நன்றாக பொடி செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் தேனை போட்டு நன்றாக சூடு படுத்திக் கொள்ள வேண்டும். பின்னர் அரைத்து வைத்துள்ள பொடியை அதில் கலந்து நன்றாக கலக்க வேண்டும். பிறகு அடுப்பை அனைத்துவிட்டு இறக்கி விட வேண்டும்.

இந்த சூரணம் நன்றாக ஆரியதை அடுத்து சிறிதளவு நெய் ஊற்றி நன்றாக கலக்கி கொள்ள வேண்டும். இந்த சூரணத்தை தினந்தோறும் இரவு உணவுக்கு பின் உண்டு வர மூல நோயிலிருந்து விடுபடலாம்.