கொழுப்பு கட்டி கரைய வேண்டுமா?? ஒரு முறை இதை தடவுங்கள்!!

0
71

கொழுப்பு கட்டி கரைய வேண்டுமா?? ஒரு முறை இதை தடவுங்கள்!!

கொழுப்பு கட்டி நீக்குவதற்கு வீட்டில் செய்யக் கூடிய வைத்தியம்.
உடலில் வலியே இல்லாமல் கைகள், கால் பகுதி, தொடை, மார்பு கீழ், அக்குள், வயிறு போன்ற உறுப்புகளில் இருக்கும் வலி இல்லாத கட்டியே கொழுப்பு கட்டிகள் என்று அழைக்கப்படுகிறது.

கொழுப்பு கட்டிகள் வலியற்றவை என்றாலும் கூட அதை கரைக்க வீட்டு வைத்தியம் உண்டு. குறிப்பாக பெண்கள் மார்பு பகுதியில் இந்த கொழுப்பு கட்டியை பார்த்ததுமே அது கேன்சராக இருக்குமோ என்று பயப்படுவது உண்டு.
உடலில் கொழுப்பு அதிகம் தேங்கும் போது அது கட்டிகளாக மாறும்.
அதனால் இந்த கட்டிகள் உடல் பருமனாக இருப்பவர்களுக்குத்தான் வரும் என்பதில்லை.

உடல் ஒல்லியாக இருப்பவர்களுக்கும் கூட வரலாம்.
உடலில் கொழுப்புகள் கரையாமல் இருக்கும் போது தான் இந்த கட்டிகள் உருவாகிறது. இதை கரைக்க எளிமையான குறிப்புகளை பின்பற்றினாலே போதுமானது. என்ன செய்தால் எளிதாக கொழுப்பு கட்டியை கரைக்கலாம் தெரிந்துகொள்வோம்.

வீட்டில் செய்யக்கூடிய வைத்தியம்…

1: வெந்நீர் போன்று சீரகம், சோம்பு, கருஞ்சீரகம் என தினம் ஒன்றாக கொதிக்க வைத்து குடித்து வரலாம். இந்த நீரையும் வெதுவெதுப்பான சூட்டில் குடித்துவர வேண்டும். குறிப்பாக அசைவ உணவு எடுத்துகொள்ளும் போதும். தொடர்ந்து இந்த வெந்நீரை குடித்துவந்தால் உடலில் கொழுப்பு கட்டி கரைவதோடு உடலுக்கு வேறுவிதமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

2: ஆரஞ்சை தோலுரித்து கொட்டை நீக்காமல் சுளைகளை சாப்பிட்டு வர வேண்டும். இது உடலில் இருக்கும் கொழுப்பை வெளியேற்றுகிறது. அதிக அளவு வேண்டாம். தினமும் ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிட்டாலே போதுமானது. நாளடைவில் பலன் தெரியும்.

3: சுத்தமான பருத்தி துணியை எடுத்து கைக்குட்டை அளவு கத்தரித்து அதன் நடுவில் பிடி அளவு கல் உப்பு சேர்த்து மூட்டை கட்டவும். இதை சுத்தமான நல்லெண்ணெயில் நனைத்து வைக்கவும். அடிகனமான தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றி பொறுக்கும் சூட்டில் இதை சூடுகாட்டி எடுத்து கட்டிகள் இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
தினமும் இரண்டு வேளை கொடுக்கலாம். சூடு ஆற ஆற உப்பு மூட்டையை மீண்டும் சூடாக்கி கொடுக்கலாம். அதே போன்று நல்லெண்ணெய்க்கு மாற்றாக விளக்கெண்ணெயும் பயன்படுத்தலாம்.

4: கொழுப்பு கட்டிகள் கரைந்த பிறகு மீண்டும் மீண்டும் வருவதற்கான வாய்ப்பு உண்டு. அதனால் உணவில் கவனம் செலுத்த வேண்டும். சாப்பிட்ட பிறகு ஒரே இடத்தில் உட்காருவதால் உணவில் இருக்கும் கொழுப்பானது உடல் திசுக்களில் சேர்ந்து மீண்டும் கொழுப்பு கட்டிகளை உண்டாக்கக்கூடும்.
இது போன்ற பயன்படுத்தினால் கொழுப்பு கட்டிகள் வராது.

author avatar
Parthipan K