70 வயதிலும் 20 போல் நோய் நொடி இல்லாமல்!! சுறுசுறுப்பாக இருக்க இது போதும்!!

0
51

70 வயதிலும் 20 போல் நோய் நொடி இல்லாமல்!! சுறுசுறுப்பாக இருக்க இது போதும்!!

தசை வலி, எரிச்சல், கால் வலி மற்றும் வாய்ப்பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் வலி, போதுமான சக்தி இல்லாமல் சோர்வாக இருப்பது, மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு அதிகமாக வலி ஏற்படுவது, போன்றவற்றையெல்லாம் கால்சியம் குறைபாட்டின் அறிகுறிகள் என்று கூறுகின்றனர்.

மேற்கண்ட குறைபாடுகள் உங்களுக்கு இருக்குமேயானால் நிச்சயமாக நீங்கள் மருத்துவரை அணுகி கால்சியத்தின் அளவை சோதித்துக் கொள்வது மிகவும் அவசியமாக இருக்கிறது.

கால்சியம் குறைபாட்டில் மூலம் பல விதமான உடல் உபாதைகள் ஏற்படும் என்று கூறுகின்றனர். அதை வருவதற்கு முன்பே தடுக்க வேண்டியது நமது அத்தியாவசிய கடமை ஆயிற்று.

கால்சியம் குறைபாடு எதனால் ஏற்படுகிறது? ஒஸ்டியோபெனிய என்கிற ஒரு காரணி ஆனது மினரல் அளவை எலும்பிலிருந்து குறைக்கிறது.

எலும்பில் உள்ள மினரல் அளவானது குறையும் பொழுது ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் வியாதி வருகிறது. இந்த வியாதியானது எலும்பை மிகவும் ஒல்லியாக மாற்றிவிடுகிறது.

எனவே அனைத்து பிரச்சினைகளையும் சரி செய்து உடலை சுறுசுறுப்பாக வைப்பதற்கு வீட்டில் செய்யக்கூடிய வைத்தியம்.

தேவையான பொருட்கள்:

உலர்ந்த பேரிச்சம்பழம்

இதில் அதிகப்படியான கால்சியம் உள்ளது. எலும்பு தேய்மானத்தை சரி செய்யும் எலும்பு வலி மூட்டு வலி அனைத்தையும் சரி செய்யும். நம் உடம்பில் ஆன்டிஆக்சிடென்ட் பண்பை நம் உடம்பில் தூண்டும்.

இதில் உள்ள லிப்போ புரோட்டின் நம் உடம்பில் உள்ள ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கும். இதில் அதிகப்படியான நார்ச்சத்து உள்ளது செரிமானத்தை சரி செய்யும் மலச்சிக்கல் பிரச்சனையும் சரி செய்யும்.

பாதாம் பருப்பு

பூசணி விதை

இதனை சாப்பிடுவதால் நம் வயிற்றில் உள்ள கிருமிகள் பூச்சிகள் அனைத்தும் நீங்கிவிடும் நம் வயிறும் சுத்தமாக இருக்கும். மலச்சிக்கல் பிரச்சனையும் தீர்க்கும்.

கசகசா

கட்டி கற்கண்டு

இதில் அதிகப்படியான கால்சியம் சத்து உள்ளது இதில் உள்ள இயற்கையான குளுக்கோஸ் நம் உடம்புக்கு நல்ல ஒரு புத்துணர்ச்சியைத் தரும் உடல் சோர்வை நீக்கும்.

செய்முறை:

1: முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 25 கிராம் பாதாம் பருப்பு 25 கிராம் பூசணி விதை மற்றும் 20 கிராம் கசகசா சேர்த்து மிதமான தீயில் ஒரு 3 mins வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

2: பின்பு 50 கிராம் உலர்ந்த பேரிச்சம் பழத்தை எடுத்து உரலில் நசுக்கி அதன் விதையை தனியாக எடுத்து விட்டு பின்பு மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். மற்றும் கட்டிக் கற்கண்டு ஒரு ஐந்து எடுத்து அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து அதை எடுத்த வைத்துக் கொள்ளவும்.

3: ஒரு கப்பில் நாம் அரைத்து வைத்த பாதாம் பருப்பு பூசணி விதை மற்றும் கசகசா பொடி பின்பு அரைத்து வைத்த பேரிச்சம்பழம் மற்றும் கற்கண்டு அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்கி ஒரு கண்டெய்னரில் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

சூடாக பால் எடுத்து அதில் நாம் அரைத்து வைத்த இந்த பொடியை ஒன்னு அல்லது ஒன்றை டேபிள் ஸ்பூன் சேர்த்து நன்றாக கலக்கி இரவு தூங்கும் முன்பு குடித்து வந்தால் கால்சியம் குறைபாடு உடல் சோர்வு கை கால் வலி நரம்பு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து உடல் சுறுசுறுப்பாக இருக்கும். இதனை நாம் தொடர்ந்து ஐந்து நாட்கள் குடித்து வந்தால் நல்ல ஒரு பலன் கண்டிப்பாக கிடைக்கும்.

author avatar
Parthipan K