முடி உதிர்தல் பாதிப்பு முற்றிலும் நீங்கி அதன் வளர்ச்சி அதிகரிக்க இந்த மூலிகை எண்ணெயை அப்ளை செய்யுங்கள்!!

0
62
#image_title

முடி உதிர்தல் பாதிப்பு முற்றிலும் நீங்கி அதன் வளர்ச்சி அதிகரிக்க இந்த மூலிகை எண்ணெயை அப்ளை செய்யுங்கள்!!

நம்மில் பலர் முடி உதிர்வு பாதிப்பால் அவதி அடைந்து வருகிறோம். இதற்கு வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை மாற்றம் காரணமாக சொல்லப்படுகிறது. நம் தலை முடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காவிட்டால் முடி உதிர்தல், வழுக்கை உள்ளிட்ட பாதிப்புகளை நம் இளம் வயதில் சந்திக்கும் நிலை ஏற்பட்டு விடும்.

தலைமுடி உதிரக் காரணங்கள்:-

*பொடுகு தொல்லை

*முறையற்ற தூக்கம்

*மன அழுத்தம்

*இரசாயனம் கலந்த ஷாம்புவை தலைக்கு உபயோகிப்பது

இதற்கு இயற்கை முறையில் தீர்வு காண்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது.

தீர்வு 1:

தேவையான பொருட்கள்:-

*வெந்தயம் – 2 தேக்கரண்டி

*நல்லெண்ணெய் – 1/2 லிட்டர்

செய்முறை…

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் 2 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும். பின்னர் அடுப்பை அணைத்து வெந்தயத்தை நன்கு ஆற விடவும்.

இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு பொடித்துக் கொள்ளவும்.

பிறகு 1/2 லிட்டர் நல்லெண்ணெயில் இந்த வெந்தயப் பொடியை போட்டு நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும். இதை ஒரு பாட்டிலில் ஊற்றி சேமித்து வைக்கவும். தினமும் இந்த எண்ணெயை கூந்தலுக்கு உபயோகித்து வந்தோம் என்றால் முடி உதிர்வு பாதிப்பு நின்று வளர்ச்சி முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.

தீர்வு 2:

தேவையான பொருட்கள்:-

*கற்றாழை ஜெல் – 3 தேக்கரண்டி

*வெங்காயச் சாறு – 3 தேக்கரண்டி

செய்முறை…

ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கி அதன் ஜெல்லை தனியாக பிரித்து ஒரு கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ளவும்.

பின்னர் 3 முதல் 4 சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.

ஒரு மிக்ஸி ஜாரில் எடுத்து வைத்துள்ள கற்றாழை ஜெல் மற்றும் வெங்காயத்தை சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி தலை முடிகளுக்கு அப்ளை செய்து 1/2 மணி நேரத்திற்கு பின் தலைக்கு குளிக்கவும்.

இவ்வாறு வாரத்திற்கு 3 முறை என தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் முடி உதிர்தல் பாதிப்பு நின்று முடி வளர்ச்சி அதிகரிக்கும்.