ஆண், பெண் அவசியம் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டிய சாஸ்திரக் குறிப்புகள்!

Photo of author

By Divya

ஆண், பெண் அவசியம் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டிய சாஸ்திரக் குறிப்புகள்!

Divya

ஆண், பெண் அவசியம் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டிய சாஸ்திரக் குறிப்புகள்!

*வீட்டில் குலதெய்வ படத்தை வைத்து தினமும் விளக்கேற்ற வேண்டும்.

*காலை நேரத்தில் கந்தசஷ்டி கவசம், பெருமாள் மந்திரம் கேட்பது நல்லது.

*வீட்டில் தினமும் பூஜை செய்வதினால் நிம்மதி, முன்னேற்றம் ஏற்படும்.

*மங்களகரமான வெள்ளிக் கிழமை நாளில் மங்கையர்கள் பிறருக்கு காசு கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

*அண்டை வீட்டு விஷயங்களை தங்கள் வீட்டில் பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

*வருடத்தில் இரு முறையாவது குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு மேற்கொள்ள வேண்டும்.

*அதிகாலை நேரத்தில் வரமிளகாயை பிறருக்கு கடன் கொடுக்காதீர்கள்.

*எந்த ஒரு கிழமையிலும் பிறருக்கு உப்பை கடன் கொடுக்கவோ.. பிறரிடம் இருந்து உப்பை கடன் வாங்கவோ கூடாது.

*வெள்ளிக்கிழமை நாளில் வீட்டு பூஜை அறையில் உள்ள தெய்வங்களுக்கு சர்க்கரை பொங்கல், பாயாசம் உள்ளிட்டவற்றை நெய்வேத்தியமாக படைக்க வேண்டும்.

*வீட்டு பூஜை அறையில் லட்சுமி உருவம் பொறித்த வெள்ளி நாணயங்களை வைப்பது நல்லது.

*பணம் வைக்கும் இடத்தில் ஒரு கிண்ணத்தில் கல் உப்பு கொட்டி ரூபாய் நாணயம் ஒன்று வைத்தால் அதன் வரவு பல மடங்கு அதிகரிக்கும்.