8 ஆம் வகுப்பு படித்து.. மிதிவண்டி ஓட்ட தெரிந்தவர்களுக்கு திருச்சியில் அரசு வேலைவாய்ப்பு!

0
254
#image_title

8 ஆம் வகுப்பு படித்து.. மிதிவண்டி ஓட்ட தெரிந்தவர்களுக்கு திருச்சியில் அரசு வேலைவாய்ப்பு!

திருச்சியில் செயல்பட்டு வரும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள “அலுவலக உதவியாளர்” பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் அஞ்சல் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

வேலை வகை: தமிழக அரசு வேலை

நிறுவனம்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு(திருச்சி)

பணி:

*அலுவலக உதவியாளர்

பணியிடம்: திருச்சி மாவட்டம் முழுவதும்

காலியிடங்கள்: மொத்தம் 01

கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதனோடு மிதிவண்டி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்களுக்கு 18 முதல் 32க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.15,00/- மூலம் ரூ.50,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

*நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் https://tiruchirappalli.nic.in/ – என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள https://cdn.s3waas.gov.in/s366368270ffd51418ec58bd793f2d9b1b/uploads/2024/01/2024011187.pdf – என்ற விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு அஞ்சல் மூலம் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

முகவரி:

ஆணையர்,
அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம்,
திருச்சிராப்பள்ளி – 639 101

கூடுதல் விவரங்களுக்கு: https://tiruchirappalli.nic.in/notification-for-filling-up-of-vacancies-of-record-clerk-and-office-assistant-in-panchayat-unions-in-tiruchirappalli-district/ –