ஸ்கேல் வைத்து அளந்து பார்க்கும் அளவிற்கு தலை முடி நீளமாக இருக்க முருங்கை கீரையை இப்படி ட்ரை பண்ணுங்கள்!!

0
190
#image_title

ஸ்கேல் வைத்து அளந்து பார்க்கும் அளவிற்கு தலை முடி நீளமாக இருக்க முருங்கை கீரையை இப்படி ட்ரை பண்ணுங்கள்!!

அனைத்து பெண்களுக்கும் கூந்தல் நீளமாக இருக்க வேண்டும் என்ற கனவு இருக்கும்.ஆனால் பாதி பேருக்கு முடி உதிர்தல்,முன் நெற்றி வழுக்கை பிரச்சனை வந்து விடும்.குழந்தை பெற்ற பின்னர் பலருக்கு முடி கொட்டல் பிரச்சனை இருக்கும்.

எனவே முடி ஆரோக்கியமான முறையில் அடர்த்தியாகவும்,நீளமாகவும் வளர இந்த எண்ணெயை தலைக்கு அப்ளை செய்து வர வேண்டும்.

தேவையான பொருட்கள்:-

1)முருங்கை கீரை
2)முருங்கை பூ
3)முருங்கை விதை
4)முருங்கை பட்டை
5)தேங்காய் எண்ணெய்

முருங்கை கீரை மற்றும் முருங்கை பூ ஒரு கைப்பிடி அளவு வாங்கி உலர்த்தி பொடி செய்து கொள்ளவும்.முருங்கை விதை மற்றும் முருங்கை பட்டை பொடி நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் 25 கிராம் அளவிற்கு வாங்கிக் கொள்ளவும்.

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு லிட்டர் சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் அரைத்த முருங்கை கீரை பொடி,முருங்கை பூ பொடி சேர்த்து கொதிக்க விடவும்.

பின்னர் வாங்கி வந்த முருங்கை விதை பொடி மற்றும் முருங்கை பட்டை பொடி சேர்த்து 15 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இந்த எண்ணெயை நன்கு ஆறவிட்டு ஒரு பாட்டிலுக்கு வடிகட்டி சேமித்துக் கொள்ளவும்.தினமும் இதை தலைக்கு பயன்படுத்தி வந்தால் தலை முடி அடர்த்தியாகவும்,நீளமாக வளரும்.