கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனைக்கு எளிய பரிகாரம்..!

0
184
#image_title

கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனைக்கு எளிய பரிகாரம்..!

எதிர்ப்பாராத செலவுகளுக்காக கடன் வாங்கத் தொடங்கி இன்று அனைத்து செலவுகளுக்கும் கடன் சூழலுக்கு நாம் தள்ளப்பட்டு விட்டோம். கடன் இல்லாத வாழ்க்கையை கனவில் கூட வாழ முடியாத நிலையில் தான் வாழ்க்கை சூழல் இருக்கின்றது.

கடனை எப்படியாவது அடைத்து விட வேண்டும் என்று சிலர் இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர். சிலர் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் வட்டி மேல் வட்டி கட்டி வருகின்றனர். இன்னும் சிலரோ ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன் வாங்குவது என்று வாழ்நாள் முழுவதும் கடன் காரங்களாகவே இருக்கின்றனர்.

இப்படி கடனில் சிக்கி தவித்து வருபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

அதற்கு முதலில் ஒரு எலுமிச்சம் பழம் எடுத்துக் கொள்ளவும். பழத்தில் எந்த ஒரு கீறல், கரும் புள்ளிகள் இருக்கக் கூடாது.

இந்த பழத்தை உங்கள் கையில் வைத்துக் கொண்டு பூஜை அறைக்கு சென்று கடன் அடைய வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளவும்.

பிறகு இதை ஒரு மஞ்சள் காட்டன் துணியில் வைத்து கட்டி நீங்கள் தூங்கும் தலையணைக்கு கீழ் வைத்து விடவும். மூன்று தினங்களுக்கு பிறகு இந்த எலுமிச்சம் பழத்தை யார் கால்களும் படாத இடத்தில் போட்டு விடவும். இவ்வாறு செய்தால் நீங்கள் வாங்கிய கடன் விரைவில் அடைந்து போகும்.