வேளச்சேரியில் காதலனுடன் சென்ற பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது

0
173
#image_title

வேளச்சேரியில் காதலனுடன் சென்ற பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது

சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் அருண்குமார் (23). இவர் வேளச்சேரியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவர் தனது காதலியுடன் மோட்டார் சைக்கிள் விஜயநகர் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் அருண்குமாரின் காதலிக்கு முத்தம் கொடுப்பது போல் சைகை செய்துள்ளனர்.

அதை காதலனிடம் தெரிவித்துள்ளார். இதனால் அவர் வாகனத்தை நிறுத்தி விட்டு அவர்களை வழிமடக்கி தட்டி    கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. உடனே 2 வாலிபர்களும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மிரட்டினர்.

அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் இருந்த போலீசார் கத்தியுடன் வாக்குவாதம் செய்த 2 வாலிபவர்களை மடக்கி பிடிக்க  முயற்சித்தனர். அதற்குள் அங்கிருந்து ஒரு வாலிபர் மோட்டர் சைக்கிளில் தப்பி சென்று விட்டார். இதையடுத்து பிடிபட்ட வாலிபரை போலீஸ் நிலையத்தில் ஒப்ப்படைத்தனர்.

விசாரணையில், ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணா நகர் 4வது தெருவை சேர்ந்த தினேஷ் என்கிற கும்பகோணம் தினேஷ்(18) என தெரியவந்தது. தன் மீது போலீஸ் நிலையத்தில் குற்ற வழக்குகள் இருப்பதால் பாதுகாப்புக்காக கத்தியை வைத்திருப்பதாகவும்    தன்னுடன் வந்தவர் ஆதம்பாக்கத்தை சேர்ந்த தீபன் (20)  என தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் 3அடி நீளமுள்ள இரண்டு கத்திகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்த தப்பி ஓடிய தீபனை தேடி வருகிறார்கள்.

author avatar
Savitha