மோஷன் போக முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா? அப்போ இந்த பானம் ஒரு கிளாஸ் மட்டும் பருகுங்கள்!! உடனடி ரிசல்ட் கிடைக்கும்!!

0
68
#image_title

மோஷன் போக முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா? அப்போ இந்த பானம் ஒரு கிளாஸ் மட்டும் பருகுங்கள்!! உடனடி ரிசல்ட் கிடைக்கும்!!

தற்காலத்தில் அனைவரும் மோஷன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறோம்.இதற்கு துரித உணவு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.காலையில் எழுந்ததும் மலத்தை முறையாக வெளியற்றி விட வேண்டும்.இல்லையென்றால் அவை மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது.

மலம் வரும் உணர்வு ஏற்பட்டால் அவற்றை அடக்கி வைக்காமல் உடனடியாக வெளியேற்றி விடுவது அவசியம்.ஒருவேளை அவற்றை அடக்கி வைக்கும் பட்சத்தில் பின்னர் கழிக்கும் பொழுது நமக்கு மிகுந்த வலி ஏற்பட்டு அவை மிகவும் உலர்ந்து வெளியேறும்.இதை உடனடியாக சரி செய்வது மிகவும் அவசியம் ஆகும்.தவறும் பட்சத்தில் மலச்சிக்கல் பாதிப்பு மூல நோயாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*ஓமம் – 1/4 தேக்கரண்டி

*சீரகம் – 1/4 தேக்கரண்டி

*சோம்பு – 1 தேக்கரண்டி

செய்முறை:-

மூலிகை பானம் செய்ய முதலில் ஒரு பவுல் எடுத்து அதில் 1/4 தேக்கரண்டி ஓமம் மற்றும் 1/4 தேக்கரண்டி சீரகம் சேர்த்து கொள்ளவும்.அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்

பின்னர் அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து அதில் ஊறவைத்துள்ள ஓமம் மற்றும் சீரகத்தை தண்ணீரோடு ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விடவும்.பின்னர் அதனுடன் 1 தேக்கரண்டி சோம்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

பின்னர் அடுப்பை அணைத்து கொள்ளவும்.கொதிக்க வைத்துள்ள பானத்தை ஒரு டம்ளருக்கு வடிகட்டி சூடு பொறுக்கும் அளவில் இருக்கும் பொழுது பருகவும்.இவ்வாறு செய்து பருகினால் அடுத்த 2 மணி நேரத்தில் உடலில் உள்ள மொத்த கழிவுகளும் வெளியேறி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.