உங்களை தினமும் மூட்டு வலி பாடாய் படுத்துகின்றதா? இந்த வைத்தியம் செய்தால் வலி காணாமல் போய்விடும்!

0
178
#image_title
உங்களை தினமும் மூட்டு வலி பாடாய் படுத்துகின்றதா? இந்த வைத்தியம் செய்தால் வலி காணாமல் போய்விடும்!
மூட்டு வலி பிரச்சனையால் தினமும் வேதனையை வலியை அனுபவித்துக் கொண்டிருக்கும் அனைத்து வயதினருக்கும் இந்த பதிவு உதவியாக இருக்கும். இந்த பதிவில் மூட்டு வலியை குறைக்க என்ன செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
மூட்டு வலியை குறைக்க உதவும் மருந்தை தயார் செய்ய தேவையான பொருட்கள்…
* முடக்கத்தான் இலை
* பிரண்டை
* சீரகம்
செய்முறை…
முதலில் முடக்கத்தான் இலைகளையும் பிரண்டையையும் எடுத்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மிக்சி ஜார் எடுத்து அதில் முடகத்தான் இலைகள் 10 கிராம் அளவும் பிரண்டை 10 கிராம் அளவும் சீரகம் 10 கிராம் அளவும் சேர்க்க வேண்டும்.
இதை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதோ மூட்டு வலியை குறைக்கும் மருந்து தாயார். இந்த மருந்தை தினமும் காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குறையும்.
மற்றொரு வழிமுறை உங்களுக்காக…
அதே போல முடக்கத்தான் இலைகளை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் வாணலி ஒன்றை வைத்து அதில் சிறிதளவு நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர். சுத்தம் செய்து வைத்துள்ள பிரண்டை இலைகளை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இதை சாப்பிட்டு வந்தாலும் மூட்டு வலி குறையும்.