மரு இருக்கின்றது என்று கவலையா! ஒரே வாரத்தில் குணமாக சூப்பர் டிப்ஸ்!

0
135

மரு இருக்கின்றது என்று கவலையா! ஒரே வாரத்தில் குணமாக சூப்பர் டிப்ஸ்!

உடம்பில் உள்ள மருவினை குணப்படுத்தும் முறைகளை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம்.மருவானது நம் உடலில் சிறிதாக தோன்றும் அவை காலப்போக்கில் வளர்ந்து கொண்டே செல்லும் இதனால் உடல் ரீதியாக பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அழகு ரீதியாகவும் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. மருவானது கழுத்துப் பகுதியில் அதிகமாக தோன்றும் இதனை நம் முன்னோர்கள் மருந்துகள் வருவதற்கு முன் இதனை குணப்படுத்திக் கொண்டனர் . நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து இதனை எவ்வாறு சரி செய்து கொள்ளலாம் நாமும் தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக வெற்றிலை ஆயுர்வேத மருத்துவ முறைகளில் வெற்றிலை நிலையானது இன்றியமையாத ஒன்றாக உள்ளது. நாம் சாப்பிடக்கூடிய உணவுகளில் செரிமான பிரச்சனை ஏற்படும் பொழுது இவை ஓர் ஜீரணம் சக்தியாக பயன்படுகிறது அதாவது செரிமான பிரச்சனையை குணப்படுத்துகிறது. மேலும் தோல் ரீதியான பிரச்சனைகளையும் குணப்படுத்துகிறது.

வெற்றிலை உள்ள காம்பு மற்றும் சிறிதளவு சுண்ணாம்பு ஆகிய இரண்டையும் நன்றாக கலந்து மரு உள்ள இடத்தில் வைக்க வேண்டும். இதனை ஒரு நாளில் ஒன்று அல்லது இரண்டு முறையாவது செய்து வந்தால் நாள்பட்ட மரு மிக விரைவில் குணமடைந்து விடும்.

 

author avatar
Parthipan K