எட்டையாபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்தல் – 1 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

ration-rice-smuggling in Ettaiyapuram

எட்டையாபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்தல் – 1 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் உத்தரவுப்படி விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையிலான தனிப்படையினர் இன்று (10.04.2022) எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழவாசல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் சிலர் மூட்டைகளில் ஏதோ வாங்கி வைத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கிருந்த காவலர்களை கண்டதும் சம்பந்தப்பட்ட … Read more

ஆன்லைன் முதலீடு என லட்சம் கணக்கில் மோசடி – 2 பேர் கைது

ஆன்லைன் முதலீடு என லட்சம் கணக்கில் மோசடி - 2 பேர் கைது

ஆன்லைன் முதலீடு என லட்சம் கணக்கில் மோசடி – 2 பேர் கைது ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக பணம் சமபாதிக்கலாம் என ₹37 லட்சம் வரை மோசடி செய்த 2 பேர் தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.   தூத்துக்குடியில் பலரிடம் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக பணம் சமபாதிக்கலாம் என்று கூறி ரூபாய் 37 லட்சம் பணம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த திலீபன்ராஜ் மனைவி … Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு   வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.   இலங்கை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாலும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகத்தில் சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.   இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை மற்றும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 4 பேருக்கு குண்டாஸ்

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை மற்றும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 4 பேருக்கு குண்டாஸ்

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை மற்றும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 4 பேருக்கு குண்டாஸ்   கடந்த 07.03.2022 அன்று தாளமுத்துநகர் அருகேயுள்ள பாலதண்டாயுத நகர் பகுதியில், குடும்ப பிரச்சினை காரணமாக தாய் வீட்டிற்கு வந்த மனைவி மாரிசெல்வி (19) என்பவரை தனது நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால் வெட்டிக்கொலை செய்தும், அதை தடுக்க வந்த மனைவியின் தாயாரான சண்முகம் மனைவி மாரியம்மாள் என்பவரையும் கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் கொலையுண்ட மாரிசெல்வியின் கணவரான தூத்துக்குடி அண்ணாநகர் … Read more

வசூல் செய்த பணத்தை கொடுக்காத அதிகாரி சஸ்பெண்ட்! வெளியான அதிர்ச்சி வாக்குமூலம்

வசூல் செய்த பணத்தை கொடுக்காத அதிகாரி சஸ்பெண்ட்! வெளியான அதிர்ச்சி வாக்குமூலம்

வசூல் செய்த பணத்தை கொடுக்காத அதிகாரி சஸ்பெண்ட்! வெளியான அதிர்ச்சி வாக்குமூலம் வசூல் செய்த லஞ்ச பணத்தை கொடுக்காததால், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டதாக திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி கொடுத்துள்ள வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   திருச்சி மாவட்டம், வடக்கு காட்டூரைச் சேர்ந்தவர் சரவணகுமார், 55; மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர். இவர், தன் காரில் பிராட்டியூரைச் சேர்ந்த டிரைவர் மணி, 57 என்பவருடன், மார்ச் 30ம் தேதி திருச்சியில் இருந்து சென்னைக்கு 38.75 லட்சம் லஞ்ச … Read more

சோறு திங்க நினைவிருக்கு! வரிகட்ட நினைவில்லையா? -தூத்துக்குடி மாநகராட்சி ஊழியர்கள் அடாவடி

சோறு திங்க நினைவிருக்கு! வரிகட்ட நினைவில்லையா? -தூத்துக்குடி மாநகராட்சி ஊழியர்கள் அடாவடி

சோறு திங்க நினைவிருக்கு! வரிகட்ட நினைவில்லையா? -தூத்துக்குடி மாநகராட்சி ஊழியர்கள் அடாவடி   தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீண்ட காலமாக சொத்து வரி, குடிநீர்வரி போன்ற மாநகராட்சிக்கு செலுத்தப்படாமல் உள்ள வரி பாக்கியினை செலுத்துமாறு மாநகராட்சி நிர்வாகம் சார்பாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியாக வரி பாக்கிகளை கட்டச் சொல்லி அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.   இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி ஊழியர்கள் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று, ஆண்கள் பணிக்கு சென்றுள்ள நிலையில் பெண்கள் தனியாக உள்ள … Read more

தமிழகத்திற்கு மத்திய அரசு 7504 கோடி ரூபாய் கடனுதவி

தமிழகத்திற்கு மத்திய அரசு 7504 கோடி ரூபாய் கடனுதவி

தமிழகத்திற்கு மத்திய அரசு 7504 கோடி ரூபாய் கடனுதவி   தமிழகத்தில் சமீப காலமாக அறிவிக்கப்படாத மின்வெட்டு பல்வேறு இடங்களில் ஏற்பட்டு வருகிறது.இதற்கான காரணங்களை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் அவ்வப்போது விளக்கி வருகிறார்.   இந்நிலையில் தான் தமிழகத்தில் இருக்கு மின்வெட்டை சரி செய்யவும், சீராக மின் வினியோக திட்ட பணிகளை மேற்கொள்ளவும், மத்திய அரசு 7,504 கோடி ரூபாய் கடன் வழங்க அனுமதி அளித்துள்ளது.   குறிப்பாக தமிழகம் உட்பட பல்வேறு மாநில மின் வாரியங்கள் … Read more

பெண்ணிடம் கைவரிசையை  காட்டிய விசிக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட இருவர் கைது!

பெண்ணிடம் கைவரிசையை  காட்டிய விசிக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட இருவர் கைது!

பெண்ணிடம் கைவரிசையை  காட்டிய விசிக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட இருவர் கைது!   ஈரோடு மாவட்டத்தில் நடந்த நில மோசடியில் பெண்ணை ஏமாற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   கடந்த 2013 ஆம் ஆண்டு ஈரோட்டில் உள்ள புதூர் பகுதியில் வசிக்கும் சுசீலா என்பவர் விசிக கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜாங்கம் என்பவரிடம் 1200 சதுர அடி அளவுள்ள வீட்டு மனையை 1 லட்சத்து 80 … Read more

அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! வெளியான புதிய அறிவிப்பு

New announcement released for govt school teachers

அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! வெளியான புதிய அறிவிப்பு தமிழகதி அரசு பள்ளிகளில் பணியாற்றும் 900 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு மேலும் மூன்று ஆண்டுகளுக்கு அவர்களது பணியை நீட்டிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2013 – 14 ஆம் ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப் பள்ளிகளில், தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு, பொருளியல் மற்றும் வணிகவியல் உள்ளிட்ட  பாடங்களுக்கு 900 முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டன. இந்த … Read more

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நீங்கியதாக அரசு அறிவிப்பு

Covid Test

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நீங்கியதாக அரசு அறிவிப்பு உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பானது பல்வேறு வகையில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.இதனையடுத்து உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைளை எடுத்தன.இந்தியாவிலும் கொரோனாவுக்கு எதிராக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதனால் கொரோனா பாதிப்பானது ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.இதனையடுத்து ஏற்கனவே அமலிலில் உள்ள ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.அந்தவகையில் தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் சூழலில், 12 … Read more