மணல் அள்ளுங்க! தடுக்குற அதிகாரி இருக்க மாட்டான்! – முன்னாள் அமைச்சர் பகிரங்க மிரட்டல்…

senthil balaji

மணல் அள்ளுங்க! தடுக்குற அதிகாரி இருக்க மாட்டான்! – முன்னாள் அமைச்சர் பகிரங்க மிரட்டல்… தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை சூடு பிடித்துள்ளது. அடுத்த மாதம் 6 ஆம் தேதி தேர்தல் என்றாலும், 4ஆம் தேதி வரை மட்டுமே பரப்புரை செய்ய முடியும். அதன் பிறகு வாக்கு சேகரிக்க முடியாது. இதனால், பரப்புரைக் கூட்டங்களில் அரசியல் கட்சியினர் வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர். இன்னும் சிலர், சட்டத்திற்கு விரோதமான செயல்களை ஊக்குவிக்கும் வகையில், அதனை … Read more

மக்களை முட்டாள்களாக்கும் கருத்துக் கணிப்புகள்! இதோ ஆதாரங்கள்!

Poll

மக்களை முட்டாள்களாக்கும் கருத்துக் கணிப்புகள்! இதோ ஆதாரங்கள்! நாடு முழுவதும் தேர்தல் என்று வந்துவிட்டால் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் என்று ஆளாளுக்கு கிளம்பி விடுகின்றனர். அதிலும் சிலர் பிரபலமான கல்லூரிகளில் படித்ததாலோ அல்லது பணியாற்றியதாலோ, கல்லூரியை அடையாளமாக வைத்து கணிப்பு முடிவுகளை வெளியிடுவர். அதே போன்று, தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களும், சில தனியார் அமைப்புகளும், மாதந்தோறும் மக்களின் மனநிலை மாறுவதாகக் கூறி கருத்து கேட்கப்பட்டதாகக்கூறி கருத்துக் கணிப்புகளை அவ்வப்போது … Read more

தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு! முதலமைச்சராவது யார்? 

EPS and MK Stalin

தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு! முதலமைச்சராவது யார்? தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் அதிமுக – பாமக – பாஜக கூட்டணியும், திமுக – காங்கிரஸ் – இடதுசாரிகள் கூட்டணியும் பிரதான கூட்டணியாக களம் காண்கின்றன. இவை தவிர, மநீம – சமக – ஐஜெகே கூட்டணி, அமமுக, நாம் தமிழர் கட்சி போன்றவையும் போட்டி போடுகின்றன. திமுக கூட்டணியில் ஏறத்தால கூட்டணி தொகுதி பங்கீடு … Read more

விசிகவுக்கு 6 தொகுதி ஒதுக்கீடு! எதிர்ப்பு தெரிவித்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு!

VCK Protest

விசிகவுக்கு 6 தொகுதி ஒதுக்கீடு! எதிர்ப்பு தெரிவித்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு! தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள விடுதலை சிறுத்தைக் கட்சி, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்ததால், அவர்கள் சிறிய கட்சிகளை ஒன்றிணைத்து மூன்றாவது அணி உருவாகலாம் என பேசப்பட்டது. அதற்கு இன்று காலை விசிக தலைவர் திருமாவளவன் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், திமுகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறினார். இந்நிலையில், … Read more

வன்னியர் உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக திமுக பரப்புரை? கடுப்பில் நிர்வாகிகள்!

Anna Arivalayam

வன்னியர் உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக திமுக பரப்புரை? கடுப்பில் நிர்வாகிகள்! வன்னியர் சங்கம் மற்றும் பாமகவின் 6 கட்ட போராட்டங்களைத் தொடர்ந்து, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு உட் ஒதுக்கீடு வழங்க அரசு முடிவெடுத்தது. இதையடுத்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் பாமக குழுவுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உள் ஒதுக்கீட்டை உறுதி செய்தி செய்தனர். தொடர்ந்து நேற்று சட்டப்பேரவையில், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்காகவும், சீர்மரபினருக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்காகவும் சட்ட முன்வரைவை … Read more

இன்று வெளியாகிறது அதிமுக – பாமக தொகுதி பங்கீடு!

Anbumani met Edappadi Palanisami

இன்று வெளியாகிறது அதிமுக – பாமக தொகுதி பங்கீடு! நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்த அதிமுக – பாமக, இந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலிலும் இணைந்து போட்டியிடும் என அதிமுக கூறி வந்தது. ஆனால், இட ஒதுக்கீடு கிடைக்காமல் எந்த முடிவும் அறிவிக்க முடியாது என பாமக கூறி வந்த நிலையில், நேற்று சட்டப்பேரவையில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோரை அவர்களது … Read more

மார்ச் 31 வரை பொது முடக்கத்தை நீட்டிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்!

MHA letter to States

மார்ச் 31 வரை பொது முடக்கத்தை நீட்டிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்! கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு, பொதுமுடக்கம் என அடுத்தடுத்து போடப்பட்டு 2020ஆம் ஆண்டு முடங்கியது. ஆனால் பொருளாதார மீட்பு நடவடிக்கையாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு, பொதுமுடக்கமாக அறிவிக்கப்பட்ட நிலையில், தொற்று பரவல் குறைந்ததால் பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டது. தற்போது நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் பொதுமுடக்கம் இல்லை என்று கூறும் அளவுக்கு மக்கள் சகஜமாக அன்றாட பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், மீண்டும் … Read more

இரண்டாவது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

Bus strike

இரண்டாவது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்! 14வது ஊதிய ஒப்பந்தம், அரசுப் போக்குவரத்து கழகங்களுக்கு உரிய நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவறையற்ற வேலை நிறுத்தத்தை ஊழியர்கள் நேற்று தொடங்கினர். சென்னை உட்பட தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தொமுச, சிஐடியு உட்பட 9 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்கள் வேலை … Read more

பாலியல் புகாருக்கு உள்ளான சில மணி நேரத்தில் முன்னாள் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் தற்கொலை!

John geddert

பாலியல் புகாருக்கு உள்ளான சில மணி நேரத்தில் முன்னாள் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் தற்கொலை! அமெரிக்காவின் மிச்சிகன் மாகானத்தில் உள்ள லான்சிங் நகரில் டிவிஸ்டர்ஸ் ஜிம்னாஸ்டிக்ஸ் கிளப் என்ற பயிற்சி நிலையத்தை வைத்திருந்தவர் ஜான் கெடர்ட். இவர், அமெரிக்காவின் பெண்கள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். 63 வயதான இவர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்ட அடுத்த சில மணி நேரத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கெடர்ட் மீது அடுக்கடுக்கான பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளை அளித்தவர், அவரது பயிற்சி … Read more

மதுரையில் எலெக்ட்ரானிக்ஸ் கடையில் தீ விபத்து! கொளுந்து விட்டு எரிவதால் பரபரப்பு…

Electronics shop Fire in Madurai

மதுரையில் எலெக்ட்ரானிக்ஸ் கடையில் தீ விபத்து! கொளுந்து விட்டு எரிவதால் பரபரப்பு… மதுரையில் மீனாட்சியம்மன் கோவில் செல்லும் டவுன் ஹால் பிரதான சாலையில் உள்ள எலெக்ட்ரானிக்ஸ் கடை ஒன்றில் இரவு 10.45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென பரவியதால் அடுத்தடுத்து இரண்டு கடைகளுக்கும் பரவி கொளுந்து விட்டு எரிந்து வருகிறது. தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் கரும்புகை வெளியேறி அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் … Read more