வீடியோ : திடீரென ரெண்டாக உடைந்து மூழ்கும் கப்பல்! 24 கிலோ மீட்டருக்கு எண்ணெய் பரவல்!

Ship

வடக்கு ஜப்பானில் சென்றுக் கொண்டிருந்த பானாமா கொடி கட்டிய சரக்குக் கப்பல் ஒன்று இரண்டாக உடைந்து மூழ்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உலகம் முழுவதும் காட்டுத்தீ, கனமழை, வெள்ளம், அனல் காற்று போன்று பல்வேறு இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு வருகிறது. இது ஒருபுறம் இருக்க, மனிதனால் ஏற்படும் பாதிப்புகள் பெரிய அளவில் பூமியை அழிவுக்கு இழுத்துச் செல்கிறது. வடக்கு ஜப்பான் கடற்கரையில் சென்றுக் கொண்டிருந்த பனாமா நாட்டின் கொடி கட்டிய சரக்குக் கப்பல் ஒன்று திடீரென விபத்து … Read more

தாலிபனுக்கு பயந்து காபுலில் திடீரென படைகளை குவிக்கும் அமெரிக்கா, இங்கிலாந்து! உச்சக்கட்ட பதற்றத்தில் ஆப்கன்!!

Afghanistan

ஆப்கானிஸ்தானில் படைகளை திரும்பப்பெறுவது என அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து, நேட்டோ படைகள், இங்கிலாந்து உள்ளிட்ட மற்ற நாடுகளின் படைகளும் திரும்பப் பெறப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால், அவர்கள் அரசுக்கு ஆதரவாக செயல்பட மாட்டார்கள் என்பதால், தாலிபன்கள் அதிதீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். முதலில் நாட்டின் எல்லைகளை முழுமையாக தங்களது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்த தாலிபன்கள், ஒவ்வொரு மாகாணத்திலும் புகுந்து, முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர். கடந்த 5 நாட்களில் அதிரடி தாக்குதல்களை நடத்தி, 10 மாகாணங்களை முழுமையாக … Read more

ஆடு, மாடு வளர்த்தால் வரி செலுத்த வேண்டும்! மதுரை மாநகராட்சி அதிரடி!

Cow, Goat

வீடுகளில் ஆடு, மாடு வளர்ப்போர் இனி அரசுக்கு வரி செலுத்த வேண்டும் என மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது. மதுரை மாநகராட்சியில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி, மாநகரில் இறைச்சி மற்றும் மீன் கடைகளை நடத்த மாநகராட்சியிடம் உரிமம் பெற வேண்டும். இதற்காக கடையின் அளவுக்கு ஏற்ப, சதுர அடிக்கு ஆண்டு ஒன்றுக்கு 10 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அதேநேரத்தில் சாலை யோரங்களில் இறைச்சி, மீன் விற்பனை செய்ய … Read more

பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு அபராதம் விதித்த உச்சநீதிமன்றம்! எதற்கு தெரியுமா?

Supreme Court

வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்து விளம்பரம் செய்யாத அரசியல் கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளகள் மீதான குற்றவழக்குகளை நாளேடுகள், தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் இணையதளத்திலும் அந்த விவரங்கள் இடம்பெற வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் இது பின்பற்றப்படவில்லை என புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், விதிகளை பின்பற்றாத தேசியவாத … Read more

ஊழல் அமைச்சர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்க! கீ.வீரமணி வலியுறுத்தல்!

K Veeramani

ஆட்சியில் இருக்கும் போது, முதலமைச்சர்கள், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மீது பல்வேறு புகார்கள் வருகின்றன. அவற்றை விசாரிக்கும் நீதிமன்றங்கள், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை விசாரித்து வருகின்றனர். ஆனால், அவர்கள் ஊழல் மூலம் சம்பாதித்த பணத்தை வைத்து பன்மடங்கு கூடுதலாக சம்பாதித்து அவர்களும், குடும்பத்தினரும் மகிழ்ச்சியாகவே உள்ளனர். தமிழகத்தில் ஆட்சியில் உள்ள திமுக அமைச்சர்கள் மீதும், முன்பு ஆட்சியில் இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது. அண்மையில் முன்னாள் … Read more

பிஜேபியின் புதிய மசோதாவுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு! ஒருவர் கூட எதிர்க்காதது ஏன்?

Lok Sabha

ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை மாநில அரசே தயாரிக்க வகை செய்யும் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேறியது. மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் ஓபிசி எனப்படும் பிரிவை அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். பிசி, எம்பிசி இணைந்தது தான் ஓபிசி. இதில், எந்தெந்த சாதிகளை சேர்ப்பது என்று மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என்று ஏற்கனவே சட்டம் இருந்தது. ஆனால், அதனை மாற்றி, மத்திய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் தான் மாற்றி அமைக்கும் என்று மத்திய அரசு … Read more

அதிக கல்வெட்டுகளைக் கொண்ட தமிழுக்கு ஏன் தனி அலுவகலம் இல்லை? உயர்நீதிமன்றம் கேள்வி!

High court madurai bench

தமிழகத்தில் கீழடி, கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தொல்லியல்துறையின் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதே நேரத்தில், தாமிரபரணி ஆற்றுப்படுகை உட்பட பல்வேறு பகுதிகளில் தொல்லியல் ஆய்வை நடத்த வேண்டும் என பொதுநல மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதிகள் கிருபாகரன், துரைசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய தொல்லியல்துறை சார்பில் ஆஜரான நம்பிராஜன் மற்றும் அஜய் யாதவ் வாகியோர், அகழாய்வுத்துறையில் 41 பணியிடங்கள் … Read more

தமிழகத்தில் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும்! டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை!

Dr Ramadoss

தமிழகத்தில் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என டாக்டர் ராமதாஸ் எச்சரித்துள்ளார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில், தமிழக அரசின் செலவில் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளை படித்த பிற மாநில மருத்துவர்கள், ஒப்பந்தப்படி தமிழ்நாட்டில் பணி செய்ய முன்வராமல் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்று விட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் படித்தவர்கள் மக்களுக்கு சேவை செய்யாமல் ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு அரசு … Read more

மின்கட்டணம், பேருந்து கட்டணம், சொத்துவரி உயர்த்தப்படுமோ? அன்புமணி ராமதாஸ் அச்சம்!

Anbumani Ramadoss and bus

மின்கட்டணம், பேருந்து கட்டணம், சொத்துவரி உள்ளிட்ட அனைத்தும் உயர்த்தப்படுமோ? என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக இளைஞரணித் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சென்னையில் இன்று வெளியிட்டிருக்கிறார். தமிழகத்தின் பொதுக்கடன் ரூ. 5.70 லட்சம் கோடியாகவும், மின்வாரியம், போக்குவரத்துக்கழகங்கள் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் கடன் மட்டும் ரூ. 2 லட்சம் கோடியாகவும் அதிகரித்து … Read more

தேர்தல் வாக்குறுதிய காப்பாற்றல! வெள்ளை அறிக்கை மூலம் வேடிக்கை  காட்டுவதா? டாக்டர் கிருஷ்ணசாமி அட்டாக்!

Dr Krishnasamy

தேர்தல் வாக்குறுதிய காப்பாற்ற வழியில்லை என்பதால், வெள்ளை அறிக்கை மூலம் திமுக அரசு வேடிக்கை  காட்டுவதாக டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டியுள்ளார். தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நேற்று தமிழக அரசின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார். இதுகுறித்து அரசியல் கட்சித் தலைவர்கள், விமர்சகர்கள், பொருளாதார வல்லுநர்கள் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தனது பேஸ்புக்கில், வெள்ளை அறிக்கை குறித்து விமர்சனம் செய்துள்ளார். அதில் … Read more