மருத்துவரின் விழிப்புணர்வு நடவடிக்கை களுக்கு மோடி பாராட்டு

மருத்துவரின் விழிப்புணர்வு நடவடிக்கை களுக்கு மோடி பாராட்டு

மருத்துவரின் விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு மோடி பாராட்டு உலக அளவில் பெரும் மாற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வரும் பெயர் கொரோனா. இந்த வைரஸின் பாதிபில் இருந்து மக்களை பாதுகாக்க ஒவ்வொரு நாடுகளும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக இந்திய அளவில் தினம் தினம் புதுப்புது விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வைரஸின் பாதிப்பில் இருந்து முழுமையாக விடுபட இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் இதன் பாதிப்பில் இருந்து தப்பிக்க ஒரே வழி மக்கள் கூட்டம் … Read more

10 அல்லது அதற்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்யும் வணிகவளாகங்களை மூடுங்கள் : மாவட்ட ஆட்சியர் அதிரடி!

10 அல்லது அதற்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்யும் வணிகவளாகங்களை மூடுங்கள் : மாவட்ட ஆட்சியர் அதிரடி!

சீனாவின் பல மாகாணங்களில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு பெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய் தொற்று இத்தாலி தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த நோய் பரவாமல் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனையடுத்து பொதுமக்கள் அதிகம் கூடும் வணிகவளாகம், பூங்கா, திரையரங்கம் உள்ளிட்ட இடங்களை மூட தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்ட … Read more

கொரோனா பீதி கடலூர் மாவட்டத்தையும் விட்டுவைக்கவில்லை : அடுத்தடுத்து நடவடிக்கை!

கொரோனா பீதி கடலூர் மாவட்டத்தையும் விட்டுவைக்கவில்லை : அடுத்தடுத்து நடவடிக்கை!

உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தமிழ்நாட்டிற்கும் வந்துவிட்டது. இதனால் தமிழக அரசு மற்றும் சுகாதார துறையும் இனைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது. இதனை அடுத்து பெருநகரங்களில் பொது மக்கள் அதிகம் கூடும் வணிகவளாகம், பூங்கா, தியேட்டர் உள்ளிட்ட இடங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று அபாயம் இன்னும் குறையவில்லை என்பதால் மாவட்ட நிர்வாகங்கள் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இதனால் கடலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு நடவடிக்கையாக கடலூர் மற்றும் … Read more

வல்லரசுகளை ஒடுக்கும் கொரோனா : வெளியான ஷாக் ரிப்போர்ட், அதிர்ச்சியில் உறைந்த அமெரிக்கா!

வல்லரசுகளை ஒடுக்கும் கொரோனா : வெளியான ஷாக் ரிப்போர்ட், அதிர்ச்சியில் உறைந்த அமெரிக்கா!

லண்டனில் உள்ள பிரபல கல்லூரியின் ஆய்வுக்குழுவினர் நடத்திய கள ஆய்வில் கரோனா வைரஸ்க்கு அமெரிக்காவில் சுமார் 22 லட்சம் நபர்களும் பிரிட்டனில் சுமார் 5 லட்சம் நபர்களும் மரணமடையக்கூடும் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் பிரபல கல்லூரியின் கணித உயிரியல்(Mathematical Biology) பேராசிரியர் நீல்பெர்கூஷன் சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து ராய்ட்டர்ஸ் எக்ஸ்பிரஸ் மீடியா வெளியிட்டுள்ள செய்தி … Read more

ஆபத்து என்ற உடன் மருத்துவர் அன்புமணியை அழைக்கும் தமிழக ஊடகங்கள் ஓடிவந்து உதவும் மருத்துவர் அன்புமணி

ஆபத்து என்ற உடன் மருத்துவர் அன்புமணியை அழைக்கும் தமிழக ஊடகங்கள் ஓடிவந்து உதவும் மருத்துவர் அன்புமணி

ஆபத்து என்ற உடன் மருத்துவர் அன்புமணியை அழைக்கும் தமிழக ஊடகங்கள் ஓடிவந்து உதவும் மருத்துவர் அன்புமணி தமிழ்நாட்டில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பல்வேறு மாற்றங்களை முன்னிருத்தி புதிய பாணியில் அரசியலை கையிலெடுத்து தமிழ்நாட்டு அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற வேட்கையில் பல்வேறு துறையில் தான் செய்யப்போகும் மாற்றங்கள் என்னென்ன என்பது குறித்தும் விரிவான தேர்தல் அறிக்கையை முதலில் வெளியிட்டது பாட்டாளி மக்கள் கட்சியே. ஆனாலும் அக்கட்சியின் சார்பாக யாரும் சட்டமன்ற உருப்பினராக தேர்ந்தெடுக்கப் படவில்லை. எனினும் … Read more

டிரம்பிடம் மன்னிப்பு கேட்ட சுந்தர்பிச்சை – யார் சொன்னது அவரே சொல்லிக்கிட்டார் கலாய்க்கும் நெட்டிசன்கள்

டிரம்பிடம் மன்னிப்பு கேட்ட சுந்தர்பிச்சை - யார் சொன்னது அவரே சொல்லிக்கிட்டார் கலாய்க்கும் நெட்டிசன்கள்

டிரம்பிடம் மன்னிப்பு கேட்ட சுந்தர்பிச்சை – யார் சொன்னது அவரே சொல்லிக்கிட்டார் கலாய்க்கும் நெட்டிசன்கள் கொரோனோ வைரஸ் உலகத்தையே ஆட்டிவைத்து வரும் நிலையில் உலகின் தலைசிறந்த பொருளாதாரமாகவும் உயர் மருத்துவ சேவைகள் கிடைக்கும் எந்த முன்னேறிய நாடுகளையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. அந்தவகையிலே கொரோனோ வைரஸ் பாதிப்பால் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் அந்த நாட்டில் அவசர நிலையை பிரகடணப் படுத்தினார். மேலும் செய்தியாளர்களிடம் கொரோனோ வைரஸ் குறித்த தகவல்களை சேகரிக்க கூகுல் நிறுவனம் தனி வளையதளம் உருவாக்கியுள்ளதாகவும் … Read more

அனைத்து நிறுவனங்களையும் இழுத்து மூடுங்கள் யாரும் வெளியே வரவேண்டாம் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மக்களுக்கு வேண்டுகோள்

அனைத்து நிறுவனங்களையும் இழுத்து மூடுங்கள் யாரும் வெளியே வரவேண்டாம் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மக்களுக்கு வேண்டுகோள்

அனைத்து நிறுவனங்களையும் இழுத்து மூடுங்கள் யாரும் வெளியே வரவேண்டாம் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மக்களுக்கு வேண்டுகோள் கொரோனோ வைரஸ் விழிப்புணர்வும் அரசு எடுத்துவரும் நடவடிக்கை குறித்து தனியார் தொலைக்காட்சியில் நேரலையில் முன்னாள் மத்திய குடும்ப மற்றும் நலவாழ்வுத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு இன்னும் மக்களிடையே போதிய அளவு ஏற்படவில்லை என்றே தோன்றுகிறது. மக்கள் நடமாட்டம் நிச்சயமாக குறைக்க வேண்டும். சென்னையில் உள்ள வணிக வளாகங்களிலும் … Read more

முன்பதிவு செய்தால் மட்டுமே ஏழுமலையானை தரிசிக்க முடியும் திருப்பதி தேவஸ்தானத்தின் அதிரடி நடவடிக்கைகள்

முன்பதிவு செய்தால் மட்டுமே ஏழுமலையானை தரிசிக்க முடியும் திருப்பதி தேவஸ்தானத்தின் அதிரடி நடவடிக்கைகள்

முன்பதிவு செய்தால் மட்டுமே ஏழுமலையானை தரிசிக்க முடியும் திருப்பதி தேவஸ்தானத்தின் அதிரடி நடவடிக்கைகள் திருப்பதி என்ற பெயரை அறியாதவர் இந்தியாவில் இருக்க முடியாது ஏன் உலக அளவில் பேசப்படும் ஒரு திருத்தளமாக விளங்குவது திருப்பதி ஏழுமலையான் கொவில். நாளொன்றுக்கு சுமார் ஒருலட்சம் மக்கள் கூடும் திருத்தலமாக இருப்பது திருப்பதியே. கொரோனா வைரஸின் தடுப்பு நடவடிக்கையாக இந்திய அரசாங்கம் பல்வேறு வழிமுறைகளை பின்பற்ற நாள்தோரும் மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. மக்கள் அதிகம் பொதுவெளியில் கூட வேண்டாம் என அறிவுறுத்தியதோடு … Read more

இருபது ஆண்டுகளாக அரசை ஏமாற்றும் டி.டி.வி.தினகரன் விளக்கம் கேட்டு அமலாக்கத்துறை நோட்டீஸ்

இருபது ஆண்டுகளாக அரசை ஏமாற்றும் டி.டி.வி.தினகரன் விளக்கம் கேட்டு அமலாக்கத்துறை நோட்டீஸ்

இருபது ஆண்டுகளாக அரசை ஏமாற்றும் டி.டி.வி.தினகரன் விளக்கம் கேட்டு அமலாக்கத்துறை நோட்டீஸ் அந்நிய செலாவனி மோசயடி வழக்கில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அவர்கள் 31 இலட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என 1998 ஆம் ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து டி.டி.வி.தினகரன் அவர்கள் உயர்நீதி மன்றம் மற்றும் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.ஆனாலும் இரண்டு நீதிமன்றத்திலும் இவருடைய வழக்ஙு தள்ளுபடி செய்யப்பட்டு அபராதம் செலுத்தும் படி தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனாலும் இதுநாள் வரையில் … Read more

நாமக்கலில் சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தி வரும் திமுக பிரமுகர் – அச்சத்தில் நடவடிக்கை எடுக்க கோரும் பொது மக்கள்!

நாமக்கலில் சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தி வரும் திமுக பிரமுகர் - அச்சத்தில் நடவடிக்கை எடுக்க கோரும் பொது மக்கள்!

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த அமைந்துள்ளது இருக்கூர் கிராமம். இது பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகரான பாலுசாமி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நோய்த்தொற்று பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறது. கொரோனா வைரஸ் மற்றும் பறவை காய்ச்சல் நூல் பரவுவதால் பிராய்லர் கோழிகள் பாதிக்கப்பட்டு இருந்து … Read more