எழுவர் விடுதலை தீர்மானம் ஆளுநரால் நிராகரிப்பா? தடைக்கல்லாக மாறினாரா சீமான்?

எழுவர் விடுதலை தீர்மானம் ஆளுநரால் நிராகரிப்பா? தடைக்கல்லாக மாறினாரா சீமான்?

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் எழுவர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் நிராகரித்து விட்டதாக தெரிகிறது. சீமானின் பேச்சுக்கு பிறகு, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு செய்திகள் இப்போது டாப். அந்த வழக்கில், கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை கைதிகளாக நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், உள்ளிட்ட 7 பேர் சிறையில் உள்ளனர். அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்யும் வகையில், தமிழக அரசு 2014ம் ஆண்டு சட்டப்பேரவையில் தீர்மானம் … Read more

மகனை ஹீரோ ஆக்கியது எப்படி? தங்கர் பச்சான் பேட்டி

Thangar Bachchan latest interview-News4 Tamil Latest Online Tamil News Today

மகனை ஹீரோ ஆக்கியது எப்படி? தங்கர் பச்சான் பேட்டி தான் இயக்கம் டக்கு முக்கு டிக்கு தாளம் என்ற படத்தில் தனது மகனை ஹீரோவாக நடிக்க வைத்தது ஏன் என்பது குறித்து இயக்குனர் தங்கர்பச்சான் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் அழகி,பள்ளிக்கூடம் போன்ற உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அழகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குனரான தங்கர் பச்சான் தனது மகன் விஜித் பச்சானை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ என்ற புதிய படத்தை … Read more

பாஜக அசுர வெற்றி காங் பாதாளத்தில்! கருத்து கணிப்பு முடிவுகள்

பாஜக அசுர வெற்றி காங் பாதாளத்தில்! கருத்து கணிப்பு முடிவுகள்

பாஜக அசுர வெற்றி, காங் அகல பாதாளத்தில்! கருத்து கணிப்பு முடிவுகள் மஹாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தலில் பாஜக அதிகமான இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் எனவும், காங்கிரஸின் செல்வாக்கு சரியும் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. மஹாராஷ்டிரா மற்றும் அரியானாவில் வரும் அக்., 21ல் சட்டசபை தேர்தல் நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் அக்., 24ல் வெளியிடப்படுகிறது. கட்சிகளின் பிரசாரம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு தொலைக்காட்சிகள் கருத்துக்கணிப்பின் முடிவுகளை வெளியிட்டு … Read more

பஞ்சமி இடமா? நிருபித்தால் அரசியலில் இருந்து விலக தயார்! மு.க.ஸ்டாலின் இராமதாசுக்கு சவால்

பஞ்சமி இடமா? நிருபித்தால் அரசியலில் இருந்து விலக தயார்! மு.க.ஸ்டாலின் இராமதாசுக்கு சவால்

பஞ்சமி இடமா? நிருபித்தால் அரசியலில் இருந்து விலக தயார்! மு.க.ஸ்டாலின் இராமதாசுக்கு சவால் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் நேற்று திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் அசுரன் படத்தை பார்த்துவிட்டு, படம் அல்ல பாடம், என்று டிவிட்டரில் புகழ்ந்து தள்ளினார். இதற்கு நேற்று திரு.இராமதாஸ் அவர்கள் படத்தை பார்த்துவிட்டு பாடமாக எடுத்துக்கொண்ட ஸ்டாலின் அவர்கள், திமுகவின் முரசொலி வளாகம் பஞ்சமி நிலத்தில்தான் கட்டப்பட்டது என்று டிவிட் செய்திருந்தார், இதற்கு பதிலளிக்கும் விதமாக மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று டிவிட் … Read more

அடித்து ஆடும் மருத்துவர்! யார்க்கர் வீசிய தளபதி!!

அடித்து ஆடும் மருத்துவர்! யார்க்கர் வீசிய தளபதி!!

மருத்துவர் இராமதாஸ் அவர்கள் திமுகவின் முரசொலி நிறுவனமே பஞ்சமி நிலத்தில் தான் கட்டப்பட்டுள்ளது, அதை ஸ்டாலின் உரியவர்களிடம் ஒப்படைப்பாரா என கேள்வி எழுப்பியிருந்தார். மு.க ஸ்டாலின் அதை எதிர்த்து பின்வருமாறு அறிக்கை விட்டிருக்கிறார். மருத்துவர் ராமதாஸ் அவர்கள், தற்போது “முரசொலி “ இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார்.! அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா- மனை! நான் சொல்வது பொய்; அது பஞ்சமி நிலம் என்று மருத்துவர் … Read more

பதவி உயர்வு கிடையாது திமுக ஆதரவு பெற்ற அமைப்புக்கு எடப்பாடி வைத்த ஆப்பு!

பதவி உயர்வு கிடையாது திமுக ஆதரவு பெற்ற அமைப்புக்கு எடப்பாடி வைத்த ஆப்பு!

பதவி உயர்வு கிடையாது திமுக ஆதரவு பெற்ற அமைப்புக்கு எடப்பாடி வைத்த ஆப்பு! திமுகவின் ஆதரவு பெற்ற ஜாக்டோ – ஜியோ அமைப்பின் சார்பில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதிகப்படியான சம்பளம், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் கடந்த ஜனவரி மாதம் போராட்டம் மிகப்பெரிய அளவில் … Read more

ஒரு கிலோ தக்காளி ரூ.80! அதிர்ச்சியடைந்த மக்கள்

ஒரு கிலோ தக்காளி ரூ.80! அதிர்ச்சியடைந்த மக்கள்

டெல்லி: டெல்லியில்  தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து, ஒரு கிலோ 80 ரூபாய் வரை விற்கிறது. மகராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகளவு தக்காளி விளைகிறது. கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் கனமழையால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு, ஏற்றுமதி குறைந்தது. அதன்காரணமாக, டெல்லியில் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். டெல்லியில் 2 வாரங்களுக்கு முன்பு, ஒரு கிலோ தக்காளி ரூ.45க்கு விற்கப்பட்டது. ரகம், தரத்துக்கு ஏற்ப தற்போது … Read more

வாக்காளர்களுக்கு கரன்சி சப்ளை: சிக்கிய திமுக எம்எல்ஏ, பின்னி எடுத்த பொதுமக்கள்

வாக்காளர்களுக்கு கரன்சி சப்ளை: சிக்கிய திமுக எம்எல்ஏ, பின்னி எடுத்த பொதுமக்கள்

நெல்லை : நாங்குநேரி அருகே வாக்காளர்களுக்கு பண விநியோகம் செய்ய முயன்றதாக எழுந்த தகவலால் திமுக எம்எல்ஏவை சரமாரியாக தாக்கி வீட்டில் வைத்து பொதுமக்கள் பூட்டினர். நாங்குநேரி இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடக்கிறது. அதற்கான அதிமுக, திமுக கடும் பிரச்சாரத்தில் குதித்துள்ளது. இரு கட்சியினரும் போட்டி போட்டு கொண்டு களத்தில் இறங்கி இருக்கின்றனர். இந் நிலையில் மூலக்கரைப்பட்டி அருகே அம்பலம் என்ற பகுதியில் மாரியப்பன் என்பவரின் வீடு உள்ளது. அந்த வீட்டில் பெரியகுளம் தொகுதி திமுக … Read more

5 சதவீத அகவிலைப்படி உயர்வு! தமிழக அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி

TN Govt Decision to Stop Bi Cycle Scheme-News4 Tamil Online Tamil News Channel

சென்னை: 5 சதவீத அகவிலைப்படி உயர்வால், தமிழக அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, அடிப்படை ஊதியத்தில் இதுவரை 12 சதவீதமாக இருந்த அகவிலைப்படி இனி 17 சதவீதமாக வழங்கப்படும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படி உயர்வு அறிவிப்பால் தமிழக அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுதொடர்பாக நிதித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் பிறப்பித்துள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு … Read more

புதிய பழமொழிகளை உருவாக்கி தமிழுக்கு தொண்டாற்றும் ஸ்டாலின்

புதிய பழமொழிகளை உருவாக்கி தமிழுக்கு தொண்டாற்றும் ஸ்டாலின்

தமிழகத்தின் எதிர்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் அவர்கள் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அண்மைய தேர்தல் பிரச்சாரத்தின் போது நாங்கள் சொல்வதை தான் சொல்வோம், செய்வதைத் தான் செய்வோம் என்று உளறிக்கொண்டு இருந்தார். இதை பார்த்த வேட்பாளர் செய்வதறியாது திகைத்து கொண்டிருந்தார். ஒவ்வொரு பேச்சிலும் இப்படி உளறி தமிழுக்கு மிகப்பெரிய அளவில் தொண்டாற்றி கொண்டு இருக்கிறார் எதிர்கட்சி தலைவர். முன்னதாக நடந்த இடைத்தேர்தல் பிரச்சார கூட்டத்தில் எண்பத்தி ஏழும் ஒன்பதும் நூற்றி ஏழு … Read more