10 ரூபாய்க்கு டீ-ஷர்ட்…விளம்பரத்தால் வினையை தேடிக்கொண்ட வியாபாரி..!!!

10 ரூபாய்க்கு டீ-ஷர்ட்...விளம்பரத்தால் வினையை தேடிக்கொண்ட வியாபாரி..!!!

மதுரை : வியாபாரத்தை பெருக்கும் நோக்கில் வியாபாரிகள் பலரும் பல்வேறு விதமான வியாபார யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.பரிசு பொருட்கள் வழங்குவது,விலை குறைப்பது போன்ற பல்வேறு சலுகைகளை வழங்குகின்றனர். அதுபோல இங்கு மதுரையில் வியாபாரி ஒருவர் 10 ரூபாய்க்கு டீ-சர்ட் விற்பனை செய்யப்படும் என்று செய்யப்பட்ட விளம்பரத்தால் ஜவுளிக் கடையில் மக்கள் அதிகளவில் கூடினர்.இதனால் கொரோனா விதிகளை பின்பற்றவில்லை என்று கடையை காவல்துறையினர் பூட்டிவிட்டனர். மதுரை கோ.புதூரில் உள்ள பிரபல ஜவுளிக்கடை நிர்வாகம், தங்களது இரண்டாவது ஆண்டு தொடக்க … Read more

தாய் குளிக்கும் வீடியோவை இன்ஸ்ட்டா லைவ் செய்த மகள்- பெற்றோர்களே உஷார்

தாய் குளிக்கும் வீடியோவை இன்ஸ்ட்டா லைவ் செய்த மகள்- பெற்றோர்களே உஷார்

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு நேர்ந்த தர்ம சங்கடமான நிகழ்வு ஒன்றை டிக் டாக் செயலியில் பகிர்ந்துள்ளார். குழந்தைகளை வளர்ப்பது என்பது மிகவும் நேர்த்தியான கலை . அதை எல்லோராலும் எல்லா நேரத்திலும் நேர்த்தியாக கையாண்டு விட முடியாது. அதுவும் இன்றைய நவீன காலத்தில் குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் சிக்கலான சவாலாய் உள்ளது. இப்படி தன பெண் குழந்தையால் நடந்த தர்ம சங்கடமான சூழல் ஒன்றை அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் பகிர்ந்துள்ளார். அமெரிக்காவை … Read more

அந்தரங்க பகுதியில் அன்னையே சூடு வைத்த அவலம்..!

அந்தரங்க பகுதியில் அன்னையே சூடு வைத்த அவலம்..!

கோழிக்கோடு : ஆன்லைன் வகுப்பினைக் கவனிக்காத 6 வயது குழந்தையை கொடூர குணம் கொண்ட தாய் ஒருவர் சூடு வைத்து கொடுமை செய்துள்ள சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள குமாரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 6 வயது நிரம்பிய குழந்தை ஒன்று உடம்பில் பல இடங்களில் தீக்காயங்களுடன் உறவினர்கள் மூலமாக அக்குழந்தை கொண்டு வரப்பட்டது. குழந்தையின் காயத்தினை கவனித்த மருத்துவர்களுக்கு இந்த தீக்காயம் குறித்து சந்தேகம் ஏற்பட்டது.அதனையடுத்து மருத்துவ நிர்வாகம் … Read more

அச்சத்தில் ராமேஸ்வர மீனவர்கள்…கலர் மாறிய கடல்..!!!

அச்சத்தில் ராமேஸ்வர மீனவர்கள்...கலர் மாறிய கடல்..!!!

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் கடல் பகுதியில் ‘பூங்கோரை’ எனப்படும் ஒருவகை பாசியால் கடல் நீரின் நிறம் நீல நிறத்திலிருந்து பச்சை நிறமாக மாறிவிட்டது. இந்த திடீர் நிற மாற்றத்தின் காரணமாக சிறிய ரக மீன்கள் உயிரிழக்கும் அபாயம் எதுவும் நேரக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பாம்பன் முதல் வேதாளை வரை பச்சை நிறப் பூங்கோரைப் பாசிகள் நீரின் மூலம் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கத் தொடங்கின. இதையடுத்து … Read more

‘சுற்றுச்சூழல் ஆஸ்கார் விருதை’ தட்டி செல்ல தடம் பதிக்க போகும் தமிழகத்து தாரகை..!!!

'சுற்றுச்சூழல் ஆஸ்கார் விருதை' தட்டி செல்ல தடம் பதிக்க போகும் தமிழகத்து தாரகை..!!!

லண்டன்: நமது பூமி கிரகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சுற்றுச்சூழல் சவால்களுக்கு தீர்வு காணும் நோக்கில், அதற்கான சிறந்த கண்டுபிடிப்பை உருவாக்குவோருக்கு ‘எர்த்ஷாட்’ என்ற பெயரில் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தான் இந்த பரிசை உருவாக்கினார். இந்த பரிசு, ‘சுற்றுச்சூழல் ஆஸ்கார் விருது’என்றும் பெருமையாக அழைக்கப்படுகிறது. இந்த விருதுக்காக தேர்ந்தெடுக்கப்படும் 5 பேருக்கு தலா 1 மில்லியன் பவுண்டு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.10 கோடி) பரிசாக வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சுற்றுச்சூழல் ஆஸ்கார் … Read more

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுகிறதா?

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுகிறதா?

கொரோனா பெருந்தொற்று ஒட்டு மொத்த உலகையே வீட்டினுள் பூட்டி வைத்து என்றே சொல்லலாம். இதனால் மற்றவர்கள் பாதித்ததை விட நம் எதிர்கால தலைமுறையாக பள்ளி பிள்ளைகளின் எதிர்காலமே கேள்விக்குறியானது. 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பித்த ஊரடங்கின் போது மூடப்பட்ட பள்ளிகள் இன்றும் பள்ளி திறப்பு பல சிக்கலான சவால்களை சந்தித்து வருகின்றது எனக் கூறினால் மிகையாகாது.என்னதான் இணைய வழிக்கல்வி என்று கூறினாலும் ஒரு மாணவன் பள்ளிக்கு வந்து ஆசிரியரின் நேரடி கண்காணிப்பில் பாடம் கற்பதே சிறந்த … Read more

வாக்காளர்களுக்கு வேட்டு வைத்த வேட்பாளர்…ஏமாற்றத்தில் மக்கள்..!!!

வாக்காளர்களுக்கு வேட்டு வைத்த வேட்பாளர்...ஏமாற்றத்தில் மக்கள்..!!!

பூந்தமல்லி: குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொழுமணிவாக்கம் என்கிற ஊராட்சியில் நேற்று முன்தினம் 2-வது கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.வாக்காளர்களுக்கு பணம்,பரிசு பொருட்கள் போன்றவற்றை கொடுப்பது தற்போது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது என்பதே நிதர்சனம் . அங்கு நடைபெற்ற வாக்குப்பதிவின்போது ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனக்கூறி வாக்கு சேகரித்தனர். அதுமட்டுமல்லாது 1-வது வார்டு வாக்காளர்களுக்கு வார்டு உறுப்பினர்களுள் ஒருவராக போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் தங்க … Read more

இந்த அறிகுறிகள் உடம்பில் உள்ளதா? நீங்கள் உஷாராக வேண்டிய நேரம்

இந்த அறிகுறிகள் உடம்பில் உள்ளதா? நீங்கள் உஷாராக வேண்டிய நேரம்

கொரோனா என்ற பெருந்தொற்று வந்த பிறகு தான் நமக்கு நோயெதிர்ப்பு பற்றிய விழிப்புணர்வே வந்து இருக்கிறது உடலில் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களே அதிகமான நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். அடிக்கடி நோய் தொற்றுக்கு ஆளாவது, அடிக்கடி சளி மற்றும் காய்ச்சல் ஏற்படுவது, குளிர்காலத்தில் மூச்சுத்திணறல், ஒவ்வாமை, ஆஸ்துமா போன்றவை நோய் எதிர்ப்பு சக்தி பலவீனத்தின் காரணிகளாகும். நல்ல உணவு முறை பழக்கத்தின் மூலம் இழந்த நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுவிடலாம். நவீன வாழ்க்கை முறையினால் சரியான தூக்கம் … Read more

கவரிங் நாணயத்தை கொடுத்து ஓட்டு வாங்கிய வேட்பாளர்

கவரிங் நாணயத்தை கொடுத்து ஓட்டு வாங்கிய வேட்பாளர்

பூந்தமல்லியை அடுத்த குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொழுமணிவாக்கம் ஊராட்சியில் நேற்று முன்தினம் 2-வது கட்ட உள்ளாட்சி தேர்தலானது நடைபெற்றது. அப்போது நடந்த வாக்குப்பதிவின் போது ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறி ஒன்றாவது வார்டு வாக்காளர்களுக்கு வார்டு உறுப்பினராக போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் தங்க நாணயங்களை பரிசாக கொடுத்ததாக தெரியவருகிறது. வாக்காளர்கள் வாக்களித்துவிட்டு அந்த நாணயத்தை அடகு வைக்க சென்றபோது, அந்த நாணயம் … Read more

பிரசவ வலியால் துடித்த பெண்ணை 11 மணி நேரம் காத்திருக்க வைத்த அவலம்!

பிரசவ வலியால் துடித்த பெண்ணை 11 மணி நேரம் காத்திருக்க வைத்த அவலம்!

பீஹார் அருகே பிரசவ வலியால் துடித்த பெண்ணை 11 மணி நேரமாக ஆஸ்பத்திரியின் வாயிலில் அமர வைத்திருந்த அவலம் நடந்துள்ளது. தானே பிவண்டியை சேர்ந்த பழங்குடி பெண் ரோகிணி மாருதி முக்னே (28). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் மதியம் 1 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரது உறவினர்கள் பிவண்டியில் உள்ள இந்திரா காந்தி நினைவு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்குள்ள ஊழியர்கள் ரோகிணியை மருத்துவமனையில் அனுமதிக்க … Read more