ஆப்கானிஸ்தான் : யார் இந்த முல்லா ஹசன்?

ஆப்கானிஸ்தான் : யார் இந்த முல்லா ஹசன்?

தாலிபான் இயக்கத்தை தொடங்கியவர்களில் ஒருவரானா முல்லா ஹசன் ஆப்கானிஸ்தான் நாட்டின் புதிய இடைக்கால பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டின் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள முல்லா ஹசன் யார் என்பதை பலரும் கூகுள் வழியாக தேடிவருகின்றனர். இடைக்கால பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள முல்லா ஹசன் அகுண்ட் ஆப்கானிஸ்தானின் காந்தஹாா் மாகாணத்தைச் சோ்ந்தவா். தலிபான்கள் இயக்கத்தைத் தொடங்கியவா்களில் ஒருவரான அவர் தலிபான்களின் முந்தைய ஆட்சிக் காலத்தில் (1996-2001) வெளியுறவு அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும் பதவி வகித்துள்ளார். அதே போல் துணைப் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள … Read more

தலிபான்களின் புதிய அரசு அறிவிப்பு: பிரதமா்-முல்லா ஹசன் அகுண்ட்!

தலிபான்களின் புதிய அரசு அறிவிப்பு: பிரதமா்-முல்லா ஹசன் அகுண்ட்!

ஆப்கானிஸ்தானில் புதிய இடைக்கால அரசை தலிபான்கள் செவ்வாய்க்கிழமை அறிவித்ததையடுத்து அந்நாடின் பிரதமராக முல்லா ஹசன் அகுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளாா்.தலிபான்களின் அரசுக்கு தலைமை வகிப்பாா் என எதிா்பாா்க்கப்பட்ட அந்த இயக்கத்தின் இணை நிறுவனரான முல்லா அப்துல் கனி பராதா் இடைக்கால அரசின் துணைப் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளாா். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினா் ஆக. 31-ஆம் தேதி முழுமையாக வெளியேறினா். அதற்கு முன்னதாகவே நாட்டின் ஒவ்வொரு மாகாணமாக கைப்பற்றி வந்த தலிபான்கள், கடந்த ஆக. 15-ஆம் தேதி தலைநகா் காபூலை கைப்பற்றினா். அதன்பிறகு … Read more

ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட்: தலைமை தாங்கும் ஆனந்த்!

ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட்: தலைமை தாங்கும் ஆனந்த்!

5 முறை உலக சாம்பியனான தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் தலைமையில் 12 பேர் கொண்ட இந்திய அணி செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கிறது. கடந்த ஆண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டி ஆன்லைன் மூலம் நடந்தது. இதில் இந்தியா, ரஷியா அணிகள் கூட்டாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின. இந்த ஆண்டுக்கான உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியும் ஆன்லைன் மூலம் நடக்கிறது. இந்த போட்டி இன்று முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 12 சுற்றுகள் கொண்ட இந்த … Read more

ஈரோடு-தாராபுரம் அகல ரயில்பாதை அமைச்சரிடம் கோரிக்கை வைத்த எல்.முருகன்

ஈரோடு-தாராபுரம் அகல ரயில்பாதை அமைச்சரிடம் கோரிக்கை வைத்த எல்.முருகன்

ஈரோட்டில் இருந்து தாராபுரம் வழியாக பழனி செல்லும் புதிய அகல ரயில் பாதை குறித்து, மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை நேற்று சந்தித்து பேசினார். அந்த சந்திப்பின்போது , ‘‘மக்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், அப்பகுதியின் விவசாய பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்பது தாராபுரம் மக்களின் நீண்டகால கோரிக்கை என தெரிவித்த முருகன் வாரணாசியிலிருந்து காஞ்சிபுரம் வழியாக ராமேசுவரத்துக்கு பயணிகள் விரைவு … Read more

டி20 உலக கோப்பை- இன்று அறிவிக்கப்படுகிறதா? இந்திய அணி

டி20 உலக கோப்பை- இன்று அறிவிக்கப்படுகிறதா? இந்திய அணி

டி20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ஆம் தேதி முதல் நவம்பர் 14-ஆம் தேதி வரை ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் நடக்கிறது. இதற்கான 15 பேர் கொண்ட அணிப்பட்டியலை வருகிற 10-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கெடு விதித்துள்ளது. … Read more

மஹராஷ்டிராவில் கொரோனா 3-ஆவது அலை -அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மஹராஷ்டிராவில் கொரோனா 3-ஆவது அலை -அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நாட்டிலேயே மராட்டிய மாநிலம் மும்பையில் கொரோனா 3-வது அலை வந்து விட்டதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மும்பை மேயர் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார். மராட்டியத்தில் கொரோனா தினசரி பாதிப்பு சுமார் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரமாக உள்ளது. 60 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு, இந்த அளவுக்கு குறைந்ததால், கொரோனா கட்டுக்குள் வந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக பொதுமக்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் பாதிப்பு சதவீதம் மெல்ல மெல்ல அதிகரித்து வருவதாக … Read more

புறநகர் ரயில் சேவையில் மாற்றம் – பொதுமக்களின் கவனத்திற்கு!

புறநகர் ரயில் சேவையில் மாற்றம் - பொதுமக்களின் கவனத்திற்கு!

சென்னை எழும்பூா்-விழுப்புரம் மாா்க்கத்தில் தாம்பரம் யாா்டில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், புறநகா் ரயில் சேவையில் இன்று (08.09.2021) பல மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. தாம்பரம் மார்க்கத்தில் பொறியியல் வேலைகள் நடைபெறுவதால் சில ரயில் சேவைகள் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி, கும்மிடிப்பூண்டி- செங்கல்பட்டுக்கு காலை 7.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. அதேபோல் சென்னை கடற்கரை -செங்கல்பட்டுக்கு காலை 9.32, 10.10, 10.56, முற்பகல் 11.50, நண்பகல் 12.15 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார … Read more

ஹர்பஜன் சிங் அர்ஜுன் நடித்துள்ள பிரண்ட்ஷிப் படம் டீசர் வெளியானது

ஹர்பஜன் சிங் அர்ஜுன் நடித்துள்ள பிரண்ட்ஷிப் படம் டீசர் வெளியானது

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்த ஹர்பஜன் சிங் முதல் முறையாக தமிழில் நடிக்கும் பிரண்ட்ஷிப் என்னும் படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் மிக சிறந்த சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்த பஞ்சாபை சேர்ந்த ஹர்பஜன் சிங் தமிழ் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். பிரன்ட்ஷிப் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் ஒரு எதிர்மறையான வேடத்தில் நடித்துள்ளார். அதேபோல் சதீஷ், குக் வித் … Read more

மீண்டும் மோதும் தல-தலைவர் : பொங்கல் ஸ்பெஷல்…

மீண்டும் மோதும் தல-தலைவர் : பொங்கல் ஸ்பெஷல்...

வருகிற தைப்பொங்கல் அன்று தல அஜித் நடித்த வலிமை படமும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படமும் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழ் திரையுலகின் அதிக ரசிகர்களைக் கொண்டுள்ள மிகப் பெரிய நடிகர்களான அஜித் மற்றும் ரஜினி ஆகியோர் தற்பொழுது வலிமை மற்றும் அண்ணாத்த படங்களில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த இரண்டு படங்களின் வெளியீட்டுத் தேதியும் பொங்கல் என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டதையொட்டி … Read more

டி20 தரவரிசை : தொடர்ந்து முதலிடத்தில் ஷஃபாலி வர்மா!

டி20 தரவரிசை : தொடர்ந்து முதலிடத்தில் ஷஃபாலி வர்மா!

டி20 தரவரிசையில் இந்தியாவின் ஷஃபாலி வர்மா தொடர்ச்சியாக முதலிட வகித்து வருகிறார். மகளிர் டி20 தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் ஷஃபாலி வர்மா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்தியாவுக்காக களமிறங்கிய இளைய வீராங்கனையான 17 வயதேயான ஷஃபாலி கடந்த வருடம் டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்தார். அதிலிருந்து தொடர்ந்து இன்று வரை தொடர்ச்சியாக முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார். இதுவரை 25 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஷஃபாலி … Read more