அரியர் மாணவர்கள் அதிர்ச்சி..!! கட்டாயம் தேர்வு நடத்தப்படும்!

அரியர் மாணவர்கள் அதிர்ச்சி..!! கட்டாயம் தேர்வு நடத்தப்படும்!

அரியர் தேர்வு எழுத வேண்டிய மாணவர்கள் டிசம்பர் 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து கல்லூரி மாணவர்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் நடக்கவிருந்த பருவத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், அடுத்த கல்வியாண்டு தொடங்கியதை தொடர்ந்து மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் மற்றும் … Read more

6.62 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு!

6.62 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு!

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகில் உள்ள பல நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 66,230,912 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 45,812,406 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 18,894,049 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 106,136 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உலக அளவில் 1,524,457 … Read more

ஜனவரியில் உறுதியாக பள்ளிகள் திறக்கப்படும்!! மத்திய அரசு உத்தரவு!

ஜனவரியில் உறுதியாக பள்ளிகள் திறக்கப்படும்!! மத்திய அரசு உத்தரவு!

பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு வருகின்ற ஜனவரி மாதத்தில் பள்ளிகளை கண்டிப்பாக திறக்க வேண்டும் என இந்திய பள்ளி தேர்வு சான்றிதழ் கவுன்சில் தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. அடுத்த கல்வியாண்டு தொடங்கியதை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையானது கிட்டத்தட்ட 9 மாதங்களாக … Read more

வாகன ஓட்டிகள் அதிர்ச்சி! அதிகரித்துக் கொண்டே போகும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை!!

வாகன ஓட்டிகள் அதிர்ச்சி! அதிகரித்துக் கொண்டே போகும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி பொதுத் துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை, சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப தினந்தோறும் மாற்றி அமைத்து வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் … Read more

ஜார்க்கண்ட் மாநில அரசு அதிரடி நடவடிக்கை – அரசு ஊழியர்களுக்கு புதிய கட்டளை!

ஜார்க்கண்ட் மாநில அரசு அதிரடி நடவடிக்கை - அரசு ஊழியர்களுக்கு புதிய கட்டளை!

ஜார்கண்ட் மாநிலத்தில், மக்கள் எந்த வகையிலும் புகையிலையை உட்கொள்ளாத மண்டலமாக மாற்றுவதற்கு அம்மாநில அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது அம்மாநில அரசு புதிதாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.  அது என்னவென்றால், அம்மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் எவ்வித வகையிலும் புகையிலையை உட்கொள்ள மாட்டோம் என்று எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி பத்திரத்தில் கையொப்பமிட வேண்டுமாம். இந்த புதிய கட்டளையை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.  அதாவது புகையிலையை புகைக்கும் மற்றும் உண்ணும் ஆகிய … Read more

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் புதிய அறிவிப்பு! என்ன தெரியுமா?

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் புதிய அறிவிப்பு! என்ன தெரியுமா?

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ், மும்பையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது, “நாட்டின் பணக்கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை” என்பதை அறிவித்தார்.  அதாவது ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு தரும் கடனுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் அத்துடன் வங்கிகளின் வைப்புத் தொகைக்கு செலுத்த வேண்டிய வட்டி விகிதத்திலும் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்பதையும் அறிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு வழங்கும் கடன் தொகைக்கான வட்டி விகிதம் மாற்றம் … Read more

ஹைதராபாத் மாநிலத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது!

ஹைதராபாத் மாநிலத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது!

ஹைதராபாத் மாநிலத்தில் டிசம்பர் 1ஆம் தேதியன்று மாநகராட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. சுமார் 150 வார்டுகள் உள்ளன. அங்கு மொத்தம் 75 லட்சம் வாக்குரிமை உள்ள வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தேர்தல் அன்று, காலை நேரத்தில் மந்தமாக தொடங்கிய வாக்குப்பதிவு சில மணி நேரங்களுக்குப் பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. ஆயினும் 34 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளதாம். தற்போது தேர்தலில் பதிவான வாக்குகள், இன்று காலை 8 மணி முதல் … Read more

இனி இந்த நாட்டில் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு கிடைக்கும்! அது எந்த நாடு தெரியுமா?

இனி இந்த நாட்டில் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு கிடைக்கும்! அது எந்த நாடு தெரியுமா?

உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்த் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் அனைத்து நாடுகளும் தீவிரமாக செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே.  தற்போது நம் நாட்டில், தடுப்பூசி முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகளை கடந்துள்ள நிலையில் இறுதிகட்ட பரிசோதனை நடத்தப்பட்டு வருகின்றது.  தற்போது பிரிட்டனில் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு வழங்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. ஃபைசர் – பயோன்டெக் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி மருந்தை மக்களுக்கு வழங்க அந்நாட்டு அரசு … Read more

ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்து ‘ஸ்புட்னிக்-V’ இந்தியா வருகை! எதற்கு தெரியுமா?

ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்து ‘ஸ்புட்னிக்-V’ இந்தியா வருகை! எதற்கு தெரியுமா?

அனைத்து நாடுகளிலும் கொரோனா நோய் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. தற்போது ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி சென்ற வாரம் இந்தியா வந்தடைந்தது. இம்மருந்து இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட கிளினிகல் பரிசோதனைக்காக இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.  இந்தியாவில் இருக்கும் டாக்டர் ரெட்டீஸ் லேபும், ரஷ்யாவில் இருக்கும் நேரடி முதலீட்டு நிதி அமைப்பும் இணைந்து இந்த கிளினிகல் பரிசோதனைகளை செய்வதற்கான நடவடிக்கைகளை துவங்கியுள்ளனர். முதல் கட்டமாக 10 கோடி ஸ்புட்னிக் வி … Read more

Bata நிறுவனத்தின் ஒரு முக்கிய பதவிக்கு முதன் முதலில் ஒரு இந்தியர் நியமிக்கப்பட்டார்!

Bata நிறுவனத்தின் ஒரு முக்கிய பதவிக்கு முதன் முதலில் ஒரு இந்தியர் நியமிக்கப்பட்டார்!

காலனி தயாரிப்பதில் மிகவும் பிரபலமாக இருக்கும் பல நிறுவனங்களில் இந்த பாட்டா  நிறுவனமும் ஒன்றாகும். இந்த நிறுவனம் 126 ஆண்டுகளாக செயல்பட்டு கொண்டு வருகிறது. மக்களிடத்தில் நன்மதிப்பையும், நம்பிக்கையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிறுவனமும் அதிக அளவில் வாடிக்கையாளர்களை கொண்டுள்ள முக்கிய நிறுவனமாகும். தற்போது இந்நிறுவனத்தின் குளோபல் சிஇஓ என்ற பதவிக்கு ஒரு இந்தியரை நியமித்து உள்ளது இந்த நிறுவனம். இந்த நிறுவனத்தின் குளோபல் சிஇஓ பதவிக்கு ஒரு இந்தியரை நியமிப்பது இதுவே முதல் முறை ஆகும். சந்தீப் … Read more