தமிழகத்தில் ஒரே நாளில் 5,242 பேருக்கு பாதிப்பு! அக். 10 கொரோனா பாதிப்பு நிலவரம்!!

தமிழகத்தில் ஒரே நாளில் 5,242 பேருக்கு பாதிப்பு! அக். 10 கொரோனா பாதிப்பு நிலவரம்!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,242 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,51,370 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று மட்டும் தொற்று காரணமாக 67 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 10,187 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 5,222 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து … Read more

ஊழியர்கள் விரும்பினால் தொடர்ந்து வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி !!

ஊழியர்கள் விரும்பினால் தொடர்ந்து வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி !!

மென்பொருள் நிறுவனங்களில் முன்னணியாக விளங்கி வரும் மைக்ரோசாப்ட் நிறுவனமானது, தங்களது ஊழியர்கள் விரும்பினால் நிரந்தரமாக வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிக்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்க ஊடக செய்தி நிறுவனம் செய்தியை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா நோய் தொற்று காரணமாக பெரும்பான்மையான ஊழியர்கள் தங்களது வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இருப்பினும் தற்பொழுது நோயின் அளவு குறைவடையும் நிலையில், ஊழியர்கள் விரும்பினால் நிரந்தரமாகவே வீட்டிலிருந்தே பணியாற்ற வாய்ப்பளிப்பதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுகுறித்து வெளியான … Read more

செமஸ்டர் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு !! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு !!

செமஸ்டர் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு !! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு !!

செமஸ்டர் தேர்வு கட்டணங்களை செலுத்துவதற்கான கால அவகாசம் அக்டோபர் 29-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு கட்டணத்தை செப்டம்பர் 5- ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் மீறும் பட்சத்தில் அவர்கள் பெயரை பட்டியலிலிருந்து நீக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், மாணவர்களின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த இச்சூழ்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும், இதனை எதிர்த்து கல்லூரி … Read more

பூசாரியை உயிருடன் கொளுத்தி கொல்ல முயற்சி !!

பூசாரியை உயிருடன் கொளுத்தி கொல்ல முயற்சி !!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே ஒரு கோவில் பூசாரியை பெட்ரோல் ஊற்றி உயிருடன் கொன்ற சம்பவம் அரங்கேறி , பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வடமாநிலங்களில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகமாகி வருகிறது .இதனை கட்டுப்படுத்த அம்மாநில அரசும் இயலாத நிலை அரங்கேறி வருகிறது. குறிப்பாக கிராமப் பகுதிகளிலும் ,படிப்பறிவு இல்லாத காரணத்தினாலும், மூடநம்பிக்கையில் மூழ்கி இருப்பதனாலும் தான் , இச்சம்பவங்கள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதன் பட்டியல்களில் உத்திரப்பிரதேசம் முதலிடத்திலும் இராஜஸ்தான் இரண்டாவது இடத்திலும் … Read more

சாலையோரம் கிடந்த தங்க நாணயங்கள் !! மக்கள் திரண்டதினால் பரபரப்பு !!

சாலையோரம் கிடந்த தங்க நாணயங்கள் !! மக்கள் திரண்டதினால் பரபரப்பு !!

ஓசூர் அருகே சாலையோரம் குவிந்து கிடந்த தங்க நாணயத்தை சேகரிப்பதற்காக பொதுமக்கள் திரண்டதால் , அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர் காவல் குடியிருப்பில் , கர்நாடக மாநிலம் சர்ஜபுரம் செல்லும் சாலை அமைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று சாலையோரம் திடீரென்று சென்றபோது தங்க நாணயங்களை, யாரோ வீசி சென்றிருப்பதாக தகவல் பரவியது. இதனால் அவ்விடத்திற்கு 200 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு சேகரிக்கத் தொடங்கினார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. … Read more

ஆசிரியர் இரும்பு ஸ்கேலால் மாணவனை தாக்கியதால் மாணவன் மரணம் !!

ஆசிரியர் இரும்பு ஸ்கேலால் மாணவனை தாக்கியதால் மாணவன் மரணம் !!

சென்னையில் உள்ள பள்ளிக்கரணையில் மல்லேஸ்வரி நகரில் வேலு என்பவர், மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்தார். இவரது மகன் கார்த்திக் என்பவர் ,மேடவாக்கத்தில் கடந்த கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவரது மகன் கார்த்திக், கடந்த பிப்ரவரி மாதம் வகுப்பறையில் தனது நண்பர்களுடன் தகாத முறையில் விளையாடிக்கொண்டு இருந்ததாக ஆசிரியர்கள் இரும்பு ஸ்கேலால் கண்மூடித்தனமாக அடித்துள்ளனர். இதனால் சில மாணவர்களுக்கு கை மற்றும் கால் பகுதியில் பலமான காயம் ஏற்பட்டு இருந்தது.ஆசிரியர் அடித்ததில் கார்த்திக்கிற்கு தலையில் … Read more

இந்தியாவில் 85.51% பேர் குணம்! அக். 10 கொரோனா பாதிப்பு நிலவரம்!

இந்தியாவில் 85.51% பேர் குணம்! அக். 10 கொரோனா பாதிப்பு நிலவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 73,272 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69,79,424 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 926 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 1,07,416 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 82,753 … Read more

சர்ச்சைகளால் சாதனை படைத்த இரண்டாம் குத்து டீசர்!

சர்ச்சைகளால் சாதனை படைத்த இரண்டாம் குத்து டீசர்!

தமிழ் சினிமாவில் அடல்ட் படங்களை தைரியமாக கையில் எடுத்து இயக்கும் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார். இவர் ‘ஹரஹர மஹாதேவகி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்தப் படத்தை தொடர்ந்து இவர் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். மேலும் ஆர்யாவை வைத்து கஜினிகாந்த் என்ற படத்தையும் இயக்கினார். இந்நிலையில் ‘ஹரஹர மஹாதேவகி’ மற்றும் ‘இருட்டுஅறையில்முரட்டுகுத்து’ ஆகிய இரண்டு படங்களுமே அடல்ட் காமெடி படங்கள் வெளியாகி அடல்ஸ் மத்தியில் செம ஹிட் அடித்தது. … Read more

குட் நியூஸ்! இனி ரயில் கிளம்பும் 5 நிமிடத்திற்கு முன்பு கூட டிக்கெட் பெறலாம்!!

குட் நியூஸ்! இனி ரயில் கிளம்பும் 5 நிமிடத்திற்கு முன்பு கூட டிக்கெட் பெறலாம்!!

இன்று முதல் ரயில் புறப்படுவதற்கு 5 நிமிடத்துக்கு முன்பு வரை டிக்கெட் பெறலாம் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் ரயில் போக்குவரத்து சேவை அனைத்தும் முடக்கப்பட்டன. பின்னர், ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், மீண்டும் ரயில் சேவை தொடங்கியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ரயில் புறப்படுவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு முன்பதிவு நடைபெற்று … Read more

தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்! ஸ்டாலின்னின் அடுத்த நகர்வு என்ன?

தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்! ஸ்டாலின்னின் அடுத்த நகர்வு என்ன?

தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிசாமி முதல்வராக ஆட்சி செய்து வருகிறார். மேலும் இத்தனை நாட்களாக அதிமுகவில் நிலவிவந்த முதல்வர் வேட்பாளர் பிரச்சனை முடிவுக்கு வந்தது. வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஓபிஎஸ் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் தற்போது இருக்கும் அரசியல் சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஸ்டாலினுக்கும் கடும் போட்டி நிலவ இருப்பது உறுதி. இவ்வாறு இருக்க தமிழகமெங்கும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் திமுக கட்சி அதிர்ந்து  போயுள்ளது. இந்த போஸ்டர்களில் … Read more