நீட் தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்பு!

நீட் தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்பு!

நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் அமைக்கப்பட்ட 3,842 தேர்வு மையங்களில் கடந்த செப்.13ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் 14 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதினர். இதைத் தொடர்ந்து நீட் தேர்வுக்கான விடைகளை தேசிய தேர்வு முகமை அமைப்பு அண்மையில் வெளியிட்டது. மேலும், நீட் தேர்வுக்கான முடிவுகள் வரும் அக். இரண்டாவது வாரத்திற்குள் வெளியிடப்படும் என்றும் … Read more

கொரோனா காலத்தில் பள்ளிக்கு சென்றதால் மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!

கொரோனா காலத்தில் பள்ளிக்கு சென்றதால் மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியில் மாணவர்கள் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. புதிய கல்வியாண்டு தொடங்கியதை தொடர்ந்து பல பள்ளிகள் ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தி வருகின்றன. ஆனால், பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள பல மாணவர்களுக்கு இந்த கொரோனா காலத்தில் … Read more

கிடப்பில் கிடந்த டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு குறித்து நடவடிக்கை !!

கிடப்பில் கிடந்த டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு குறித்து நடவடிக்கை !!

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் நடவடிக்கையால், மேலும் 6 பேர் கைது செய்துள்ளனர். முக்கியமாக கருதப்படும் டிஎன்பிஎஸ்சி தேர்வு வழக்கானது கிடப்பில் உள்ளதாக புகார் எழுந்த நிலையில், தற்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் மையங்களில் தேர்வு எழுதிய நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களில் 40-க்கும் அதிகமானோர் முன்னிலை பெற்றனர். இதனால் சந்தேகமடைந்த நிலையில், முறைகேடு நடந்திருப்பதாக … Read more

இந்தியாவில் 86.16% பேர் குணம்! அக். 11 கொரோனா பாதிப்பு நிலவரம்!

இந்தியாவில் 86.16% பேர் குணம்! அக். 11 கொரோனா பாதிப்பு நிலவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 74,383 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70,53,807 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 918 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 1,08,334 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 89,154 … Read more

மேட்டூர் அணையின் நீர்வரத்து தொடர்ந்து மூன்று நாட்களாக அதிகரிப்பு !!

மேட்டூர் அணையின் நீர்வரத்து தொடர்ந்து மூன்று நாட்களாக அதிகரிப்பு !!

கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த மூன்று நாக்களாக நீரின் அளவு அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து மூன்று நாட்களாக அதிகரித்து வருகிறது .   இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.50 அடியாக அதிகரித்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக தொடர்ந்து அதிகரித்து வருவதாக  … Read more

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி: இந்த 7 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி: இந்த 7 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுபெற்றதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் மற்றும் அதனை ஒட்டி உள்ள கிழக்கு வங்க கடற்பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மேலும் வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது. அடுத்த … Read more

தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!

தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!

திண்டுக்கல் அருகே உள்ள மகாலட்சுமி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பக்தர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி சுவாமியை தரிசனம் செய்தனர். கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே, டி.பண்ணைபட்டியில் உள்ள … Read more

அக். 11 உலக அளவில் கொரோனா பாதிப்பு நிலவரம்!

அக். 11 உலக அளவில் கொரோனா பாதிப்பு நிலவரம்!

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகில் உள்ள பல நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 37,467,892 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 28,112,552 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 8,277,845 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 68,632 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உலக அளவில் 1,077,495 … Read more

ஏடிஎம்மில் பணம் வரவில்லை! வங்கிகள் இழப்பீடு வழங்க உத்தரவு… ரிசர்வ் வங்கி அதிரடி!!

ஏடிஎம்மில் பணம் வரவில்லை! வங்கிகள் இழப்பீடு வழங்க உத்தரவு... ரிசர்வ் வங்கி அதிரடி!!

ஏடிஎம்மில் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்க தவறினால், வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தற்போதுள்ள காலகட்டத்தில் பணம் தேவை என்றால் வங்கிக்கு தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. அருகிலுள்ள ஏடிஎம்-களுக்கு சென்றாலே போதும், நாம் வைத்திருக்கும் சேமிப்பு கணக்கிலிருந்து பணம் எடுத்துக்கொள்ளலாம். ஏடிஎம் உபயோகிக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், சில நேரங்களில் … Read more

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இறுதியாண்டு தேர்வு முடிவுகள் வெளியீடு!

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இறுதியாண்டு தேர்வு முடிவுகள் வெளியீடு!

BEd/ M.Ed/ B.Ed spl/ B.sc. + B.Ed ஆகிய பட்டடிப்புகளில் பயின்ற இறுதியாண்டு மாணவர்களின் தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடக்கவிருந்த பருவத் தேர்வுகள் அனைத்தும் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இறுதியாண்டு மாணவர்களைத் தவிர மற்ற … Read more