தமிழக சட்டசபை தேர்தல்! துணை ராணுவ படை வருகை!

தமிழக சட்டசபை தேர்தல்! துணை ராணுவ படை வருகை!

தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதி மார்ச் மாதம் அறிவிக்கப்படலாம் என்ற காரணத்தால், இந்த மாத இறுதிக்குள் அரசு திட்டங்கள் எல்லாவற்றையும் செயல்படுத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஆரம்ப புள்ளியாக தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு வரும் 25-ஆம் தேதி துணை ராணுவ படை தமிழகம் வரை இருக்கின்றது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம் போன்ற ஐந்து மாநில சட்டசபைக்கு வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தேர்தல் நடக்க இருக்கிறது. … Read more

நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்! முதல்வரை காப்பியடித்த ஸ்டாலின்!

நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்! முதல்வரை காப்பியடித்த ஸ்டாலின்!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின், மக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கிக்கொண்டார். அதன்பிறகு உரையாற்றிய அவர் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை வரை வாங்கி இருக்கின்ற நகை கடன்கள் எல்லாம் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்தார். அதேபோல கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவி குழுக்கள் வாங்கியிருக்கும் கடன்கள் அனைத்தும் மொத்தமாக தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறார். அதோடு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு எதிரான குற்ற … Read more

மனைவி வீட்டை விட்டு சென்றதால் சாமியாருக்கு ஏற்பட்ட பரிதாபம்!

மனைவி வீட்டை விட்டு சென்றதால் சாமியாருக்கு ஏற்பட்ட பரிதாபம்!

சென்னை மதுரவாயல் அடுத்து இருக்கின்ற ஆலப்பாக்கம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்தார். இவருடைய குடியிருப்பு பக்கத்தில் ஆதிபராசக்தி அங்காள பரமேஸ்வரி என்ற பெயரில் கோவில் ஒன்றை வைத்து அதில் பொதுமக்களுக்கு அருள்வாக்கு தெரிவித்து வருகின்றார். இந்த நிலையில், ராஜேந்திரனின் கோவில் அருகே திருமலை என்பவர் வசித்து வருகின்றார். இதன் காரணமாக, ராஜேந்திரனுக்கும் திருமலைக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில், திருமலையின் மனைவி சென்ற இரண்டு தினங்களுக்கு முன்னால் கணவருடன் தகராறு செய்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறி விட்டார். … Read more

அதிமுகவில் இணக்கமாகும் அமமுக! 40 சீட் டீல் ஓகே?

அதிமுகவில் இணக்கமாகும் அமமுக! 40 சீட் டீல் ஓகே?

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் சில தொழிலதிபர்கள் மூலமாக பாரதிய ஜனதா கட்சியின் மேலிடத்தை தொடர்புகொண்டு அதிமுகவிடம் தன்னுடைய கட்சியை இணைப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் அவருக்கு பொதுச் செயலாளர் பதவியை கொடுத்தால் கட்சியை இணைக்க தயார் எனவும், பாரதிய ஜனதா கட்சி சொல்வது படி நடப்பதாகவும், உறுதியளித்திருக்கிறார் டிடிவி தினகரன். இதற்கு ஒருசில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் சம்மதம் தெரிவித்து … Read more

பெண்களின் ஓட்டை அள்ளுவதற்கு முதல்வரின் அடுத்த அதிரடி அறிவிப்பு!

பெண்களின் ஓட்டை அள்ளுவதற்கு முதல்வரின் அடுத்த அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாட்டில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது அதோடு அதற்கான தேதியும் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. ஆகவே தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து வருகின்றார். ஒவ்வொரு மாவட்டத்தின் தேவைகளையும் அறிந்து கொண்டு அதற்கான பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 16.43 லட்சம் விவசாயிகளின் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதேபோல 24 மணி நேரமும் … Read more

அமைச்சர் செங்கோட்டையன் உயிருக்கு திடீரென்று ஏற்பட்ட ஆபத்து! அதிர்ச்சியில் அதிமுக வட்டாரம்!

அமைச்சர் செங்கோட்டையன் உயிருக்கு திடீரென்று ஏற்பட்ட ஆபத்து! அதிர்ச்சியில் அதிமுக வட்டாரம்!

கோபி அருகே இருக்கின்ற வேட்டைக்காரன் கோவில் பகுதியில் ரூபாய் 4.60 கோடி செலவில் அமைக்கப்பட்டு இருக்கின்ற படகு சவாரி உடன் உடைய பூங்காவை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே. சி கருப்பண்ணன் போன்றோர் ஆரம்பித்து வைத்தார்கள். அந்த சமயத்தில், அமைச்சர்கள், ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் போன்றோர் படகு சவாரி ஆரம்பித்து வைப்பதற்காக விசைப்படகில் ஏற முற்பட்டனர். அந்த சமயத்தில் படகு தடுமாறி கவிழும் நிலைக்கு … Read more

சொந்த கட்சியின் முதுகிலேயே குத்திய கார்த்தி சிதம்பரம்! காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி!

சொந்த கட்சியின் முதுகிலேயே குத்திய கார்த்தி சிதம்பரம்! காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடந்த காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசியதாவது, காங்கிரஸ் கட்சியினர் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் பொய் கூறுகிறார்கள் அதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். தொடர்ச்சியாக உரையாற்றிய கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் கட்சியில் 70 லட்சம் உறுப்பினர்கள் இருப்பதாக பொய்யான ஒரு அறிக்கையை கொடுத்திருக்கிறார்கள் எனவும், அதனை நம்பி தேர்தலில் நின்ற எனக்கு உறுப்பினர்களே வாக்கு செலுத்தவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். அனைத்து … Read more

திமுகவின் மாபெரும் திட்டத்தில் மண்ணை அள்ளிப் போட காத்திருக்கும் அதிமுக!

திமுகவின் மாபெரும் திட்டத்தில் மண்ணை அள்ளிப் போட காத்திருக்கும் அதிமுக!

தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் அதிமுக மற்றும் திமுக போன்ற பலம் வாய்ந்த கட்சிகள் ஒரு மிகப்பெரிய மாநாட்டை நடத்தி தன்னுடைய செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்வது காலம் காலமாக நடந்து வரும் ஒரு வழக்கம். அவ்வாறு கட்சிகள் சார்பாக நடத்தப்படும் அந்த மாநாடு அந்த கட்சிக்கு தேர்தல்களில் மிகப்பெரிய பக்கபலமாக இருக்கும் அந்தவிதத்தில் திருச்சியில் திமுக நடத்தவிருக்கும் மாநாடு தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்த செயலாக பார்க்கப்படுகின்றது. மார்ச் மாதம் 14ஆம் தேதி மாநாடு … Read more

உங்களுக்கு ஒரு வருடமாக தான் லாக்டவுன் எனக்கு பத்து வருடமாக லாக்டவுன்! வேதனையில் நடிகர் வடிவேலு!

உங்களுக்கு ஒரு வருடமாக தான் லாக்டவுன் எனக்கு பத்து வருடமாக லாக்டவுன்! வேதனையில் நடிகர் வடிவேலு!

முன்பொரு காலத்தில் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தவர் நடிகர் வடிவேலு இப்பொழுதும் கூட அவர் இல்லாமல் இணையதளத்தில் எந்த ஒரு மீம்ஸ்களும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து இருக்கின்றார். நேரமே இல்லாமல் பரபரப்பாக நடித்துக்கொண்டிருந்த வடிவேலு தற்பொழுது படங்கள் எதுவும் கிடைக்காமல் இருந்து வருகின்றார். திரையுலகைச் சார்ந்தவர்கள், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இருக்கும் நண்பேன்டா என்ற வாட்ஸ்அப் குழுவின் கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற வடிவேலு மிகவும் … Read more

வேலால் வந்த வினை! தமிழக அரசியல்வாதிகளை சீண்டிய மத்திய அமைச்சர்!

வேலால் வந்த வினை! தமிழக அரசியல்வாதிகளை சீண்டிய மத்திய அமைச்சர்!

தமிழ்நாட்டில் பாஜகவிற்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட இல்லை என்றாலும்கூட எந்த ஒரு குறையும் இல்லாமல் தமிழகத்திற்கு அனைத்தையும் செய்து வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார். பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சென்னைக்கு வந்தார். அப்பொழுது நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெற்ற அவர் உரையாடும்போது மத்திய அரசின் வேளாண் சட்டம் காரணமாக, விவசாயிகளின் நிலம் பறிபோய்விடும் என எதிர்க்கட்சிகள் தங்களுடைய பொய்யான பிரச்சாரத்தை … Read more