ட்ரீட்மென்ட் சக்சஸ்! எழுந்து நடமாடும் சசிகலா!

ட்ரீட்மென்ட் சக்சஸ்! எழுந்து நடமாடும் சசிகலா!

பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் உடல் நிலையானது தொடர்ச்சியாக சீராக இருப்பதாக அந்த மருத்துவமனையின் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை வெளியிட்டிருக்கின்ற அறிவிப்பில் பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வரும் சசிகலா உடல் நிலையானது, தொடர்ச்சியாக சீராக இருப்பதாகவும், சசிகலாவின் ரத்தத்தில் இருக்கின்ற ஆக்சிஜனின் அளவு 98 சதவீதத்தில் இருந்து 97 சதவீதமாக குறைந்து இருப்பதாகவும், தெரிவிக்கப்படுகிறது. சசிகலா உணவு சாப்பிடுவதாகவும் உதவியுடன் நடைபயிற்சியை மேற்கொள்வதாகவும் அந்த மருத்துவமனையின் … Read more

குடியரசு தின விழாவில் விவசாயிகளால் ஏற்பட்ட பதற்றம்! உச்ச கட்ட பரபரப்பில் டெல்லி!

குடியரசு தின விழாவில் விவசாயிகளால் ஏற்பட்ட பதற்றம்! உச்ச கட்ட பரபரப்பில் டெல்லி!

நாட்டின் 72வது குடியரசு தின விழா இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ,மத்திய அரசு அறிமுகம் செய்த மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்று தெரிவித்து டெல்லியை மையமாக வைத்து டிராக்டர் பேரணியை விவசாயிகள் ஆரம்பித்திருக்கிறார்கள். மத்திய அரசு அறிமுகம் செய்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விதமாக, அரியானா, பஞ்சாப் ,போன்ற மாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்திய நாட்டின் குடியரசு தினமான இன்றைய தினம் தலைநகர் டெல்லியில் … Read more

வேளாண் சட்டங்கள் டிராக்டர் பேரணி தொடர்பாக குறிப்பிட்டு பேசிய குடியரசுத் தலைவர்!

வேளாண் சட்டங்கள் டிராக்டர் பேரணி தொடர்பாக குறிப்பிட்டு பேசிய குடியரசுத் தலைவர்!

இந்திய நாட்டின் 72வது குடியரசு விழாவை தொடர்ந்து நாட்டின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கின்றார் .இதனையடுத்து நேற்றைய தினம் குடியரசு தலைவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றி இருக்கிறார். உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் குடிமக்களாகிய உங்கள் அனைவருக்கும் நாட்டின் 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு என்னுடைய அன்பார்ந்த குடியரசு தின வாழ்த்துக்கள் குடியரசு நாள் என்ற தேசிய பெருநாளையும் நாம் மகிழ்ச்சியுடன் கொண்டாட இருக்கும் நேரத்தில், நம்முடைய தேசியக்கொடி மற்றும் அரசியல் … Read more

குடியரசு தின விழா உளவுத்துறை செய்த எச்சரிக்கை! பாதுகாப்பு வளையத்திற்குள் தலைநகர்!

குடியரசு தின விழா உளவுத்துறை செய்த எச்சரிக்கை! பாதுகாப்பு வளையத்திற்குள் தலைநகர்!

டெல்லியிலே குடியரசு தின விழாவின் அணிவகுப்பு நிகழ்வுகள் நடைபெற இருக்கின்ற விஜய் சவுக் பகுதியை சுற்றி இருக்கக்கூடிய 5 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டு இருக்கின்றன. பொதுமக்கள் அதிகமாக ஒன்றிணைய கூடிய இடங்களில் துப்பாக்கியுடன் துணை ராணுவ படையினர் தீவிரமான விருந்துகளில் ஈடுபட்டு வருகிறார்கள் .அதோடு தொடர்வண்டி நிலையங்கள், பஸ் நிலையங்கள், மற்றும் விமான நிலையங்களில் ,பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்தந்த பகுதிகளில் துப்பாக்கியுடன் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு படையினர் போன்றோர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அதோடு … Read more

சீனாவிற்கு அடிபணிந்த நரேந்திர மோடி! ராகுல் காந்தி தாக்கு!

சீனாவிற்கு அடிபணிந்த நரேந்திர மோடி! ராகுல் காந்தி தாக்கு!

சீன நாட்டுப் பெயரை சொல்வதற்கே பிரதமர் நரேந்திர மோடி பயம் கொள்கிறார் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். எதிர்வரும் சட்டசபை தேர்தலை முன்வைத்து தேர்தல் பிரச்சாரத்திற்காக மூன்றுநாள் சுற்றுப்பயணத்தை ராகுல் காந்தி தமிழ்நாட்டில் தொடங்கியிருக்கிறார். கோயம்புத்தூர் ,ஈரோடு, போன்ற பகுதிகளில் பிரச்சாரம் செய்த அவர் நேற்றைய தினம் கரூர் மாவட்டத்தில் தன்னுடைய பிரச்சாரத்தை முன்னெடுத்தார். சின்ன தாராபுரத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி,இந்தியாவின் எல்லா மக்களும் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும், வாழ்ந்திட வேண்டும் என்ற … Read more

கொரோனா தடுப்பூசி பாயுது நடவடிக்கை! மத்திய அரசு எச்சரிக்கை!

கொரோனா தடுப்பூசி பாயுது நடவடிக்கை! மத்திய அரசு எச்சரிக்கை!

கொரோனா தடுப்பூசி தொடர்பாக வீண் வதந்திகளை பரப்புவோர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை பாயும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை செய்திருக்கிறது. ஒட்டுமொத்த உலகத்தையும் நடுநடுங்க வைத்து வரும் தொற்றிற்கு முடிவு கட்டும் வகையில், ஆராய்ச்சியாளர்கள் அந்த நோய்க்கு எதிரான தடுப்பு ஊசிகளை தயார் செய்து வருகிறார்கள். இதில் பி பைசர் கோவிஷீல்டு ,கோவாக்‌சின், போன்ற தடுப்பூசிகள் தற்சமயம் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவில் இந்த மாதம் 16ஆம் தேதி தொடங்கி நேற்று … Read more

வெளியானது அண்ணாத்த திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி! மகிழ்ச்சியில் ரஜினி ரசிகர்கள்!

வெளியானது அண்ணாத்த திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி! மகிழ்ச்சியில் ரஜினி ரசிகர்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் அண்ணாத்த, இந்த திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது அண்ணாத்த திரைப்படக் குழு. இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தர்பார் போன வருடம் பொங்கல் தின சிறப்பு திரைப்படமாக வெறியாகியது. இந்த திரைப்படத்தை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் அண்ணாத்த. நடிகர் அஜித்குமாருக்கு வேதாளம், … Read more

சசிகலா விடுதலை! கொரோனாவில் இருந்தும் விடுபடுகிறார் சசிகலா!

சசிகலா விடுதலை! கொரோனாவில் இருந்தும் விடுபடுகிறார் சசிகலா!

கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தண்டனை கொடுக்கப்பட்ட சசிகலா கடந்த நான்கு ஆண்டுகளாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில், நாளைய தினம் ஜனவரி மாதம் 27ஆம் தேதி அவர் விடுதலையாக இருப்பதாக பெங்களூர் சிறை நிர்வாகம் தகவல் தெரிவித்து இருக்கிறது. இருந்தாலும் சென்ற 20ஆம் தேதியன்று சிறையிலிருந்த சசிகலாவிற்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டு அதன் காரணமாக, சிறை வளாகத்திற்கு அருகே இருக்கக்கூடிய … Read more

விடாது கருப்பு! கமலை விடாமல் துரத்தும் காங்கிரஸ் கட்சி!

விடாது கருப்பு! கமலை விடாமல் துரத்தும் காங்கிரஸ் கட்சி!

சிவகங்கை பாராளுமன்ற தொகுதி எண் பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் சிதம்பரம் காரைக்குடியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அந்த சமயத்தில் அவர் பேசுகையில் ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தில் தொடர்பு உடையவர்கள் என்று சட்டத்தின்படி நிரூபணம் ஆனவர்களை இங்கே யாரும் கதாநாயகர்களாக சித்தரிக்க முயற்சி செய்ய வேண்டாம் என்று தெரிவித்திருக்கிறார். அதோடு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் உயிரிழந்த மற்ற தமிழர்கள் தொடர்பாக யாரும் எதுவும் பேசுவது கிடையாது. இந்த விவகாரத்தில் தண்டனை அடைந்தவர்கள் சட்டரீதியாக விடுதலை அடைந்தால் … Read more

குடியரசு தின விழா நிகழ்வில் பங்கேற்கும் நீலகிரி பழங்குடியினர் தம்பதிகள்! மத்திய அரசு செய்த அசத்தல் ஏற்பாடு!

குடியரசு தின விழா நிகழ்வில் பங்கேற்கும் நீலகிரி பழங்குடியினர் தம்பதிகள்! மத்திய அரசு செய்த அசத்தல் ஏற்பாடு!

தலைநகர் டெல்லியில் நாளைய தினம் இந்திய குடியரசு தின விழா நடைபெற இருக்கிறது இந்த நிகழ்ச்சியிலே,பழங்குடி வகுப்பைச் சார்ந்த ஒரு தம்பதிகள் பழங்குடியினர் சார்பாக பங்கேற்க இருக்கிறார்கள். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே இருக்கின்ற ஆறுகால் எனும் கிராமத்தைச் சார்ந்த கயம தாஸ் மற்றும் புஷ்பஜா என்ற தம்பதிகள் பழங்குடி இனத்தை சார்ந்த இந்த தம்பதிகள் கூலி வேலை பார்த்து வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இவர்கள் அவர்கள் சார்ந்த பழங்குடி இன மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக உழைத்து … Read more