பந்தா பரமசிவமான கமல்ஹாசன்!

பந்தா பரமசிவமான கமல்ஹாசன்!

ஆகாயம் மூலமாக பிரச்சாரத்திற்கு சென்று வந்த காரணத்தால் ஜெயலலிதாவே கடுமையாக விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டார். ரயில், கார் என்று அந்த வயதில் கூட தரை வழி பயணமாகவே சென்று வந்த கருணாநிதி போற்றப்பட்டார் .அதன் பிறகு ஜெயலலிதாவின் உடல் நிலை தொடர்பாக விபரங்கள் தெரிய வந்த நேரத்தில், அவர் ஆகாய மார்க்கமாகப் பயணம் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஆனாலும் கமல்ஹாசனின் ஆகாய பயணம் தான் இப்போது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கின்றது. திருச்சியில் நேற்று தன்னுடைய பிரச்சாரத்தை ஆரம்பித்து தஞ்சை, … Read more

இரவோடு இரவாக முதல்வரை சந்தித்த நடிகர் விஜய் நடந்தது என்ன! பரபரக்கும் தமிழக அரசியல்!

இரவோடு இரவாக முதல்வரை சந்தித்த நடிகர் விஜய் நடந்தது என்ன! பரபரக்கும் தமிழக அரசியல்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் கதாநாயகனாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும், முதன்முறையாக இணைந்து நடித்து இருக்கின்றார். மாஸ்டர் திரைப்படம் எப்போது திரைக்கு வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், போன்றோர் நடித்திருக்கின்றார்கள் இந்த திரைப்படத்தின் வெளியீடு கொரோனா பிரச்சனை காரணமாக பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் இந்த திரைப்படமானது ஓ.டி.டியில் வெளியிடப்படுவதாக வதந்திகள் பரப்பப்பட்டன. இதனைத் தொடர்ந்து திரைப்படத்தை திரையரங்குகளில் மட்டுமே வெளியிட இருப்பதாக தயாரிப்பாளர்கள் சார்பாக அதிகாரப்பூர்வமான அறிக்கை வெளியிடப்பட்டது. … Read more

ஆர்.கே. நகருக்கு டாடா கட்டிய டி.டி.வி. தினகரன்!

ஆர்.கே. நகருக்கு டாடா கட்டிய டி.டி.வி. தினகரன்!

டி.டி.வி. தினகரன் கோவில்பட்டி சட்டசபை தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தேர்தல் பிரிவுச் செயலாளர் மாணிக்கராஜா தெரிவித்திருக்கின்றார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய பகுதியான கடலூர் சாலையில் ஒன்றிய செயலாளர் விஜயபாஸ்கரன் ஏற்பாட்டில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் சிவபெருமாள் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக டி.டி.வி தினகரன் 57வது பிறந்தநாள் விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக … Read more

தமிழக அரசியலில் தேர்தலுக்கு பின் ஏற்படப்போகும் மிகப்பெரிய மாற்றம்! சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை தொடங்கிய பாஜக!

தமிழக அரசியலில் தேர்தலுக்கு பின் ஏற்படப்போகும் மிகப்பெரிய மாற்றம்! சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை தொடங்கிய பாஜக!

எதிர்வரும் சட்டசபை தேர்தலில் நடிகர் ரஜினி மற்றும் ஆளும் தரப்பான அதிமுகவையும் வைத்து எப்படியாவது தமிழகத்திற்குள் தன்னை நிலை நிறுத்தி விடலாம் என்று பாஜக திட்டமிட்டிருப்பதாக பரவலாக பேசப்படுகின்றது. அதைப்போலவே பாஜகவின் சமீபகால நடவடிக்கைகள் இருந்து வருகின்றன. ரஜினி தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை அறிவித்ததும், ரஜினிகாந்த அவர்களுடைய கட்சியின் ஆலோசகர்களாக பாஜகவை சார்ந்த இருவர் நியமிக்கப்பட்டதும், இதையேதான் குறிக்கின்றது என்று தெரிவிக்கப்படுகின்றது. ரஜினியின் இந்த அரசியல் அறிவிப்புக்கு முன்னரே உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் இருந்து ஒரு … Read more

நாகப்பட்டினம் மாவட்ட நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய எடப்பாடியார்! மகிழ்ச்சியில் மக்கள்!

நாகப்பட்டினம் மாவட்ட நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய எடப்பாடியார்! மகிழ்ச்சியில் மக்கள்!

தமிழ்நாட்டின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாகி இருக்கின்றது. அதனை இன்று தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொளி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆரம்பித்து வைத்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றது முதல் பல மக்கள் நலத் திட்டங்களை தொடர்ச்சியாக செயல்படுத்தி வருகின்றார். இந்த நிலையில், நிர்வாக வசதிக்காக தமிழ்நாட்டின் மாவட்டங்களில் பிரிக்கும் வகையில், மாவட்டங்கள் உடைய எண்ணிக்கையை அதிகரித்து வருகின்ற பரப்பளவு மற்றும் மக்கள் தொகையில், அதிகமாக இருக்கின்ற மாவட்டங்களில் இரு பிரிவுகளாக பிரித்து … Read more

அதிமுகவின் பேச்சுக்கு பதிலடி கொடுத்த எல். முருகன்!

அதிமுகவின் பேச்சுக்கு பதிலடி கொடுத்த எல். முருகன்!

கூட்டணி ஆட்சி கிடையாது என்று நேற்று நடைபெற்ற அதிமுகவின் பிரச்சார கூட்டத்தில் உறுதியாக தெரிவித்த பின்னரும் கூட கூட்டணி ஆட்சிதான் என்று அடுத்து தெரிவிக்கின்றார் தமிழக பாஜகவின் தலைவர் முருகன். அந்தக் கட்சிக்கு எதிராக நேற்றைய தினம் முதல்வரும், துணை முதல்வரும், பேசவில்லை ஆனாலும்கூட மற்றவர்களை பேச வைத்து வேடிக்கை பார்த்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். சென்ற 50 வருடங்களாக திராவிடக்கட்சிகளால் தேசிய கட்சிகள் தமிழகத்தில் நுழைவதற்கான வழியே இல்லாமல் போயிற்று. ஆனாலும் எப்படியாவது தமிழ் … Read more

அவர் அறிவிப்பை மட்டும் வெளியிடட்டும் மற்றவையெல்லாம் நாங்க பாத்துக்குறோம்! ரஜினி ரசிகர்கள் உருக்கம்!

அவர் அறிவிப்பை மட்டும் வெளியிடட்டும் மற்றவையெல்லாம் நாங்க பாத்துக்குறோம்! ரஜினி ரசிகர்கள் உருக்கம்!

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகையில் அடுத்தகட்ட பரபரப்பு ஆரம்பமாக தொடங்கிவிட்டது. அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக, டிசம்பர் மாதம் 14ஆம் தேதி ஹைதராபாத் ரஜினிகாந்த் படப்பிடிப்பில் இருந்த நான்கு பேருக்கு தொற்று என்ற செய்தி அறிந்து பதற்றம் ஆகிப் போனார்.அதோடு ரஜினிகாந்த் ரத்த அழுத்தத்தால் பாதிப்படைந்து டிசம்பர் மாதம் 25ஆம் தேதி ஹைதராபாத்தில் இருக்கின்ற அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் சுமார் ஒரு வாரகாலம் முழுமையாக ஓய்வில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்திய மருத்துவர்கள் நேற்றையதினம் டிஸ்சார்ஜ் செய்து … Read more

வீட்டில் அமர்ந்து கொண்டே படத்தில் நடித்த சிம்பு!

வீட்டில் அமர்ந்து கொண்டே படத்தில் நடித்த சிம்பு!

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் மாநாடு. இந்த திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்காமலேயே அவர் நடித்து இருக்கின்றார் என்று தெரிவித்தால் யாராவது நம்ப முடிகின்றதா? ஆம் அதுதான் உண்மை. வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு திரைப்படத்தில் சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ். ஜே. சூர்யா இயக்குனர் பாரதிராஜா, எஸ். ஏ. சந்திரசேகர் ஒய் .ஜி மகேந்திரன் டேனியல் பாலாஜி, மனோஜ், பாரதி பிரேம்ஜி , மற்றும் … Read more

அவர்களுக்கு முழு உரிமை இருக்கின்றது! பொன். ராதாகிருஷ்ணன் விளக்கம்!

அவர்களுக்கு முழு உரிமை இருக்கின்றது! பொன். ராதாகிருஷ்ணன் விளக்கம்!

பாஜக மற்றும் அதிமுக கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கின்றார். சட்டசபை தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சி உடனே கூட்டணியை ஆளும் தரப்பான அதிமுக வெளிப்படையாகவே அறிவித்து விட்டது. இப்பொழுது வரை கூட்டணியில் இருந்து வருவதாகவும், சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி தலைமை அறிவிக்கும் எனவும் பாஜக தெரிவித்து வருகின்றது. அதேபோல அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்ட பின்னரும் அவர் கூட்டணியின் வேட்பாளர் இல்லை என்று தெரிவித்தது … Read more

நிதான ஆட்டத்தில் இந்திய அணி!

நிதான ஆட்டத்தில் இந்திய அணி!

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாம் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் மட்டை வீச தீர்மானித்தது. ஜோ பர்ன்ஸ் மேத்யூ வேட் ஆகியோர் முதலில் களம் இறங்க நான்காவது ஓவர் பௌலிங் செய்யவந்த பும்ரா ரன் எதுவும் எடுக்க ஆரம்பிக்காத பர்ன்ஸ் விக்கெட்டை வீழ்த்தினார். பும்ப்ராவோடு ஒன்றிணைந்த அஸ்வின் மறுபுறம் விக்கெட்டை தூக்க ஆரம்பித்தார். அவர் வேட் விக்கெட்டை கைப்பற்றினார். அப்பொழுது அவர் 30 ரன்களை மட்டுமே சேகரித்து இருந்தார். இந்த … Read more