Beef.. மாட்டிறைச்சி என்றால் உங்களுக்கு அலாதி பிரியமா? அப்போ இதெல்லாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்!!

0
57
#image_title

Beef.. மாட்டிறைச்சி என்றால் உங்களுக்கு அலாதி பிரியமா? அப்போ இதெல்லாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்!!

இந்த உலகத்தில் அசைவ மற்றும் சைவ விரும்பிகள் என்று 2 வகைகளாக மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர்.சைவத்தில் உணவு வகைகள் இருப்பது போல் அசைவத்தில் ஏகப்பட்ட உணவு வகைகள் புதிது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டு,சுவைக்கப்பட்டு வரப்படுகிறது. பெரும்பாலானோர் அசைவ உணவுகள் என்றால் உயிர்,அவற்றை சாப்பிடாமல் இருக்க முடியாது என்று சொல்வதை நாம் கேள்விப்பட்டிருப்போம்.அந்தளவிற்கு மனிதர்கள் அசைவ உணவை சுவைத்து பழகி விட்டோம்.கோழி,ஆடு,மீன்,பன்றி,மாட்டிறைச்சி என்று பல வகைகள் உலகில் இருக்கின்றது.

இந்த இறைச்சிகளில் பிரியாணி,வறுவல்,கிரேவி,சில்லி,குழம்பு என்று பல வகைகள் செய்யப்பட்டு சுவைத்து வரும் நிலையில் பெரும்பாலானோருக்கு பிராய்லர் கோழிக்கு அடுத்து மாட்டிறைச்சி தான் மிகவும் பிடித்த அசைவமாக இருக்கிறது.இந்த வகை இறைச்சிகள் மிகவும் சுவையாகவும்,அதிக சதைப்பற்றுடனும் இருப்பதினால் மக்கள் அதிகம் விரும்பி உண்ணும் உணவு பட்டியலில் முக்கிய இடத்தை இவை பிடிக்கின்றது.இந்த இறைச்சியில் அதிகளவு புரதம்,
கொழுப்பு,இரும்பு,ஜிங்க்,மினரல்,வைட்டமின்கள்,கலோரிகள் உள்ளிட்டவை நிறைந்து காணப்படுகிறது.இதில் அதிகளவு B 12 இருப்பதினால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும்.என்ற போதிலும் இவற்றை அதிகளவில் உண்பதினால் உடலுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருக்கிறது.குறிப்பாக ஆண்களுக்கு தான் உடல் பாதிப்புகள் அதிகம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

மாட்டிறைச்சி அதிகம் உண்பதினால் உடலுக்கு ஏற்படும் தீமைகள்:-

*இந்த வகை இறைச்சி உணவுகளை அளவாக எடுத்து கொள்ள வில்லையென்றால் அதில் உள்ள கொழுப்பு நம் உடலின் எடையை விரைவில் கூட்டி விடும்.

*மாட்டிறைச்சியில் உள்ள கொழுப்பு மனித உடலில் உள்ள தமனிகளில் உறைந்து சீரான இரத்த ஓட்டத்தை பாதித்து சிறுவயதிலேயே மாரடைப்பு ஏற்படும் சூழலுக்கு தள்ளப்பட்டு விடுவார்கள்.

*இந்த இறைச்சி சுவையாக இருந்தாலும் இதில் உள்ள அதிகளவு கார்சினோஜென் கொடிய நோயான புற்றுநோய் பாதிப்பை உடலில் உருவாக்கி விடும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*தொடர்ந்து மாட்டிறைச்சி உணவுகளை உட்கொண்டு வந்தோம் என்றால் நம் வாழ்நாள் எளிதில் குறைந்து விடும் அபாயம் இருக்கிறது.

*குறைவான அளவில் மாட்டிறைச்சி உண்பதினால் எந்த பாதிப்பும் ஏற்படாது.ஆனால் இவற்றை அதிகம் எடுத்துக் கொண்டோம் என்றால் கல்லீரல், மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும்.

*மாட்டிறைச்சி அதிகம் உண்பதினால் உடலில் கெட்ட வியர்வை அதிகம் சுரக்கப்படும்.இதனால் உடலில் துர்நாற்றம் அதிகளவில் வீச தொடங்கும்.