“பீட்ரூட் + தயிர்” இருந்தால் உங்கள் முகம் கண்ணாடி போல் மினுமினுக்கும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

0
62
#image_title

“பீட்ரூட் + தயிர்” இருந்தால் உங்கள் முகம் கண்ணாடி போல் மினுமினுக்கும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

நம்மில் பலரது முகம் கருமையாக பொலிவிழந்து காணப்படும். இது நம் அழகை கெடுக்கும் வகையில் இருப்பதினால் அவற்றை எவ்வாறு சரி செய்வதென்று தெரியாமல் ரசாயனம் கலந்த கண்ட பொருட்களை வாங்கி முகத்தில் அப்ளை செய்கிறோம். இதனால் பக்க விளைவுகளை சந்தித்து இருந்த கொஞ்ச நஞ்ச அழகையும் கெடுத்து கொள்கிறோம்.

முகம் பொலிவற்று காணப்பட காரணங்கள்:-

*முகத்தில் எண்ணெய் வடிதல்

*முகப்பரு

*கரும்புள்ளி பாதிப்பு

*முகக் கருமை

*இரசாயனம் கலந்த க்ரீம் பயன்படுத்துதல்

தேவையான பொருட்கள்:-

*பீட்ரூட் – பாதி

*கடலை மாவு – 1 தேக்கரண்டி

*தயிர் – 1 தேக்கரண்டி

செய்முறை…

முதலில் ஒரு பீட்ரூட்டை இரண்டாக நறுக்கி கொள்ளவும். அதில் பாதி பீட்ரூட்டை எடுத்து தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கி வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு கிண்ணத்திற்கு பீட்ரூட் சாற்றை வடிகட்டி 1 தேக்கரண்டி கடலை மாவு மற்றும் 1 தேக்கரண்டி தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி காற்று புகாதவாறு மூடிக் கொள்ளவும்.

இரவு தூங்க செல்வதற்கு முன்னர் முகத்தை தண்ணீர் சுத்தம் செய்து துடைத்து விட்டு பின்னர் இந்த பேஸ்ட்டில் 1/4 தேக்கரண்டி அளவு எடுத்து முகத்தில் அப்ளை செய்து கொள்ளவும். இதை ஒரு இரவு முகத்தில் இருக்கும் படி விட்டு மறுநாள் காலையில் முகத்தை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ளவும். இவ்வாறு தினமும் செய்து வருவதன் மூலம் முகம் பொலிவாகவும், அழகாகவும் மாறத் தொடங்கும்.